சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 10:10
நியாயாதிபதிகள் 10:1

அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.

אֶת
நியாயாதிபதிகள் 10:2

அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

אֶת, יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 10:3

அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

אֶת, יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 10:6

இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.

בְּנֵ֣י, אֶת, אֶת, יְהוָ֖ה
நியாயாதிபதிகள் 10:7

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார்.

יְהוָ֖ה
நியாயாதிபதிகள் 10:8

அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.

אֶת, בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 10:9

அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம் பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 10:11

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,

יְהוָ֖ה, אֶל, בְּנֵ֣י
நியாயாதிபதிகள் 10:14

நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.

אֶל
நியாயாதிபதிகள் 10:15

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,

אֶל
நியாயாதிபதிகள் 10:16

அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 10:17

அம்மோன் புத்திரர் கூட்டங்கூடி, கீலேயாத்திலே பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே பாளயமிறங்கினார்கள்.

בְּנֵ֣י, בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 10:18

அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.

אֶל
cried
And
the
וַֽיִּזְעֲקוּ֙wayyizʿăqûva-yeez-uh-KOO
children
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
unto
אֶלʾelel
Lord,
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
We
have
sinned
חָטָ֣אנוּḥāṭāʾnûha-TA-noo
because
both
thee,
against
לָ֔ךְlāklahk
we
have
forsaken
וְכִ֤יwĕkîveh-HEE

עָזַ֙בְנוּ֙ʿāzabnûah-ZAHV-NOO
God,
our
אֶתʾetet
and
also
served
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo

וַֽנַּעֲבֹ֖דwannaʿăbōdva-na-uh-VODE
Baalim.
אֶתʾetet


הַבְּעָלִֽים׃habbĕʿālîmha-beh-ah-LEEM