சூழல் வசனங்கள் யோவான் 21:17
யோவான் 21:1

இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது:

ὁ, Ἰησοῦς
யோவான் 21:2

சீமோன் பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,

Σίμων, Πέτρος, καὶ, ὁ, καὶ, ὁ, καὶ, καὶ
யோவான் 21:3

சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.

λέγει, Σίμων, Πέτρος, αὐτῷ, καὶ, καὶ, τὸ, καὶ
யோவான் 21:4

விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.

ὁ, Ἰησοῦς, ὅτι, Ἰησοῦς
யோவான் 21:5

இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.

λέγει, ὁ, Ἰησοῦς, αὐτῷ
யோவான் 21:6

அப்பொழுது அவர் நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார், அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.

ὁ, εἶπεν, τὰ, τὸ, καὶ, καὶ
யோவான் 21:7

ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தரென்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.

λέγει, ὁ, ὁ, Ἰησοῦς, Σίμων, Πέτρος, ὅτι, ὁ, καὶ
யோவான் 21:8

மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்திலிருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

τὸ
யோவான் 21:9

அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.

καὶ, καὶ
யோவான் 21:10

இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.

λέγει, ὁ, Ἰησοῦς
யோவான் 21:11

சீமோன்பேதுரு படவில் ஏறி நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான், இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

Σίμων, Πέτρος, καὶ, τὸ, καὶ, τὸ
யோவான் 21:12

இயேசு அவர்களை நோக்கி வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.

λέγει, ὁ, Ἰησοῦς, ὅτι, ὁ
யோவான் 21:13

அப்பொழுது, இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.

ὁ, Ἰησοῦς, καὶ, καὶ, καὶ, τὸ
யோவான் 21:14

இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம்.

τρίτον, ὁ, Ἰησοῦς
யோவான் 21:15

அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.

λέγει, ὁ, Ἰησοῦς, Σίμων, Ἰωνᾶ,, με, λέγει, αὐτῷ, σὺ, οἶδας, ὅτι, φιλῶ, σε, λέγει, αὐτῷ, Βόσκε, τὰ, μου
யோவான் 21:16

இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்:என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

λέγει, αὐτῷ, Σίμων, με, λέγει, αὐτῷ, σὺ, οἶδας, ὅτι, φιλῶ, σε, λέγει, αὐτῷ, τὰ, πρόβατά, μου
யோவான் 21:18

நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைக் கட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர் வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறோருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

καὶ, καὶ, σε, καὶ
யோவான் 21:19

இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.

εἶπεν, καὶ, λέγει, αὐτῷ
யோவான் 21:20

பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம் பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.

ὁ, Πέτρος, ὁ, Ἰησοῦς, καὶ, τὸ, καὶ, εἶπεν, Κύριε, ὁ, σε
யோவான் 21:21

அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.

ὁ, Πέτρος, λέγει, Κύριε
யோவான் 21:22

அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.

λέγει, αὐτῷ, ὁ, Ἰησοῦς
யோவான் 21:23

ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவுமύ இவனிருக்க எனக்குச் சித்தமޠΩால் உனக்கென்னவென்று சொன்னார்.

ὁ, ὅτι, ὁ, καὶ, εἶπεν, αὐτῷ, ὁ, Ἰησοῦς, ὅτι
யோவான் 21:24

அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

ὁ, ὁ, καὶ, καὶ, ὅτι
யோவான் 21:25

இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.

καὶ, ὁ, Ἰησοῦς, τὰ
He
saith
λέγειlegeiLAY-gee
unto
him
αὐτῷautōaf-TOH
the
τὸtotoh
third
time,
τρίτονtritonTREE-tone
Simon,
ΣίμωνsimōnSEE-mone
son
of
Jonas,
Ἰωνᾶ,iōnaee-oh-NA
lovest
thou
φιλεῖςphileisfeel-EES
me?
μεmemay

ἐλυπήθηelypēthēay-lyoo-PAY-thay
Peter
hooh
was
grieved
ΠέτροςpetrosPAY-trose
because
ὅτιhotiOH-tee
he
said
εἶπενeipenEE-pane
unto
him
αὐτῷautōaf-TOH
the
τὸtotoh
third
time,
τρίτονtritonTREE-tone
Lovest
thou
Φιλεῖςphileisfeel-EES
me?
μεmemay
And
καὶkaikay
he
said
εἶπενeipenEE-pane
unto
him,
αὐτῷautōaf-TOH
Lord,
ΚύριεkyrieKYOO-ree-ay
thou
σὺsysyoo
knowest
πάνταpantaPAHN-ta
all
things;
οἶδαςoidasOO-thahs
thou
σὺsysyoo
knowest
γινώσκειςginōskeisgee-NOH-skees
that
ὅτιhotiOH-tee
I
love
φιλῶphilōfeel-OH
thee.
σεsesay

λέγειlegeiLAY-gee
Jesus
αὐτῷautōaf-TOH
saith
hooh
unto
him,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Feed
ΒόσκεboskeVOH-skay
my
τὰtata

πρόβατάprobataPROH-va-TA
sheep.
μουmoumoo