மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.
மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.
நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே.
அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.
அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.
| And Moses | וַיִּקְרָ֣א | wayyiqrāʾ | va-yeek-RA |
| called | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| אֶל | ʾel | el | |
| Mishael | מִֽישָׁאֵל֙ | mîšāʾēl | mee-sha-ALE |
| and Elzaphan, | וְאֶ֣ל | wĕʾel | veh-EL |
| the sons | אֶלְצָפָ֔ן | ʾelṣāpān | el-tsa-FAHN |
| of Uzziel | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| the uncle | עֻזִּיאֵ֖ל | ʿuzzîʾēl | oo-zee-ALE |
| of Aaron, | דֹּ֣ד | dōd | dode |
| and said | אַֽהֲרֹ֑ן | ʾahărōn | ah-huh-RONE |
| unto | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| them, Come near, | אֲלֵהֶ֗ם | ʾălēhem | uh-lay-HEM |
| carry | קִ֠רְב֞וּ | qirbû | KEER-VOO |
| שְׂא֤וּ | śĕʾû | seh-OO | |
| your brethren | אֶת | ʾet | et |
| from | אֲחֵיכֶם֙ | ʾăḥêkem | uh-hay-HEM |
| before | מֵאֵ֣ת | mēʾēt | may-ATE |
| the sanctuary | פְּנֵֽי | pĕnê | peh-NAY |
| out | הַקֹּ֔דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
| of | אֶל | ʾel | el |
| the camp. | מִח֖וּץ | miḥûṣ | mee-HOOTS |
| לַֽמַּחֲנֶֽה׃ | lammaḥăne | LA-ma-huh-NEH |