சூழல் வசனங்கள் யோவான் 20:1
யோவான் 20:2

உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

καὶ, ἔρχεται, καὶ, τὸν, καὶ, τὸν, ἐκ, τοῦ, μνημείου, καὶ
யோவான் 20:3

அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.

καὶ, καὶ, εἰς, τὸ, μνημεῖον
யோவான் 20:4

பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,

δὲ, καὶ, τοῦ, καὶ, εἰς, τὸ, μνημεῖον
யோவான் 20:5

அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.

καὶ, βλέπει
யோவான் 20:6

சீமோன் பேதுரு அவனுக்குப்பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,

ἔρχεται, καὶ, εἰς, τὸ, μνημεῖον, καὶ
யோவான் 20:7

சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.

καὶ, τὸ, τῶν, εἰς
யோவான் 20:8

முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.

καὶ, εἰς, τὸ, μνημεῖον, καὶ, καὶ
யோவான் 20:9

அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.

ἐκ
யோவான் 20:11

மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

Μαρία, δὲ, τὸ, μνημεῖον, εἰς, τὸ, μνημεῖον
யோவான் 20:12

இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

καὶ, καὶ, τὸ, τοῦ
யோவான் 20:13

அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

καὶ, τὸν, καὶ
யோவான் 20:14

இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

καὶ, εἰς, καὶ, τὸν, καὶ
யோவான் 20:16

இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து; ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

Μαρία
யோவான் 20:17

இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

τὸν, δὲ, καὶ, τὸν, καὶ, καὶ, καὶ
யோவான் 20:18

மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

ἔρχεται, Μαρία, ἡ, Μαγδαληνὴ, τὸν, καὶ
யோவான் 20:19

வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

μιᾷ, τῶν, σαββάτων, καὶ, τῶν, τὸν, τῶν, καὶ, εἰς, τὸ, καὶ
யோவான் 20:20

அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

καὶ, καὶ, τὸν
யோவான் 20:22

அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;

καὶ, καὶ
யோவான் 20:24

இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.

δὲ, ἐκ, τῶν
யோவான் 20:25

மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன் அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.

τὸν, δὲ, τὸν, τῶν, καὶ, τὸν, εἰς, τὸν, τῶν, καὶ, εἰς
யோவான் 20:26

மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

καὶ, ἔρχεται, τῶν, καὶ, εἰς, τὸ, καὶ
யோவான் 20:27

பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.

τὸν, καὶ, καὶ, καὶ, εἰς, καὶ
யோவான் 20:28

தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

καὶ, καὶ, καὶ
யோவான் 20:29

அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

καὶ
யோவான் 20:30

இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.

καὶ, τῶν
யோவான் 20:31

இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

δὲ, τοῦ, καὶ

Τῇtay
The
δὲdethay
first
μιᾷmiamee-AH
day
of
the
τῶνtōntone
week
σαββάτωνsabbatōnsahv-VA-tone
cometh
Μαρίαmariama-REE-ah
Mary
ay
Magdalene
Μαγδαληνὴmagdalēnēma-gtha-lay-NAY
early,
ἔρχεταιerchetaiARE-hay-tay
when
it
was
πρωῒprōiproh-EE
yet
σκοτίαςskotiasskoh-TEE-as
dark,
ἔτιetiA-tee
unto
οὔσηςousēsOO-sase
the
εἰςeisees
sepulchre,
τὸtotoh
and
μνημεῖονmnēmeionm-nay-MEE-one
seeth
καὶkaikay
the
βλέπειblepeiVLAY-pee
stone
τὸνtontone
taken
away
λίθονlithonLEE-thone
from
ἠρμένονērmenonare-MAY-none
the
ἐκekake
sepulchre.
τοῦtoutoo


μνημείουmnēmeioum-nay-MEE-oo