அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.
அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.
| As so | חַי | ḥay | hai |
| is | אָ֙נִי֙ | ʾāniy | AH-NEE |
| is | נְאֻם | nĕʾum | neh-OOM |
| live, I | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| saith King, | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| the Lord the | צְבָא֖וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| of hosts, | שְׁמ֑וֹ | šĕmô | sheh-MOH |
| name | כִּ֚י | kî | kee |
| whose Surely | כְּתָב֣וֹר | kĕtābôr | keh-ta-VORE |
| Tabor as among the | בֶּֽהָרִ֔ים | behārîm | beh-ha-REEM |
| mountains, and as | וּכְכַרְמֶ֖ל | ûkĕkarmel | oo-heh-hahr-MEL |
| Carmel sea, the | בַּיָּ֥ם | bayyām | ba-YAHM |
| by shall he come. | יָבֽוֹא׃ | yābôʾ | ya-VOH |