தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடங்காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.
பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.
சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருகிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.
| While | עֹ֖ד | ʿōd | ode |
| the earth | כָּל | kāl | kahl |
| remaineth, | יְמֵ֣י | yĕmê | yeh-MAY |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| seedtime | זֶ֡רַע | zeraʿ | ZEH-ra |
| and harvest, | וְ֠קָצִיר | wĕqāṣîr | VEH-ka-tseer |
| and cold | וְקֹ֨ר | wĕqōr | veh-KORE |
| and heat, | וָחֹ֜ם | wāḥōm | va-HOME |
| and summer | וְקַ֧יִץ | wĕqayiṣ | veh-KA-yeets |
| and winter, | וָחֹ֛רֶף | wāḥōrep | va-HOH-ref |
| and day | וְי֥וֹם | wĕyôm | veh-YOME |
| and night | וָלַ֖יְלָה | wālaylâ | va-LA-la |
| shall not | לֹ֥א | lōʾ | loh |
| cease. | יִשְׁבֹּֽתוּ׃ | yišbōtû | yeesh-boh-TOO |