தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
| And a river | וְנָהָר֙ | wĕnāhār | veh-na-HAHR |
| went out | יֹצֵ֣א | yōṣēʾ | yoh-TSAY |
| of Eden | מֵעֵ֔דֶן | mēʿēden | may-A-den |
| to water | לְהַשְׁק֖וֹת | lĕhašqôt | leh-hahsh-KOTE |
| אֶת | ʾet | et | |
| the garden; | הַגָּ֑ן | haggān | ha-ɡAHN |
| and from thence | וּמִשָּׁם֙ | ûmiššām | oo-mee-SHAHM |
| it was parted, | יִפָּרֵ֔ד | yippārēd | yee-pa-RADE |
| and became | וְהָיָ֖ה | wĕhāyâ | veh-ha-YA |
| into four | לְאַרְבָּעָ֥ה | lĕʾarbāʿâ | leh-ar-ba-AH |
| heads. | רָאשִֽׁים׃ | rāʾšîm | ra-SHEEM |