தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய்.
உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?
அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.
பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதை காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?
வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.
| If | אִם | ʾim | eem |
| thou seest | עֹ֣שֶׁק | ʿōšeq | OH-shek |
| the oppression | רָ֠שׁ | rāš | rahsh |
| of the poor, | וְגֵ֨זֶל | wĕgēzel | veh-ɡAY-zel |
| and violent perverting | מִשְׁפָּ֤ט | mišpāṭ | meesh-PAHT |
| of judgment | וָצֶ֙דֶק֙ | wāṣedeq | va-TSEH-DEK |
| and justice | תִּרְאֶ֣ה | tirʾe | teer-EH |
| in a province, | בַמְּדִינָ֔ה | bammĕdînâ | va-meh-dee-NA |
| marvel | אַל | ʾal | al |
| not | תִּתְמַ֖הּ | titmah | teet-MA |
| at | עַל | ʿal | al |
| the matter: | הַחֵ֑פֶץ | haḥēpeṣ | ha-HAY-fets |
| for | כִּ֣י | kî | kee |
| he that is higher | גָבֹ֜הַּ | gābōah | ɡa-VOH-ah |
| than the highest | מֵעַ֤ל | mēʿal | may-AL |
| regardeth; | גָּבֹ֙הַּ֙ | gābōha | ɡa-VOH-HA |
| and there be higher | שֹׁמֵ֔ר | šōmēr | shoh-MARE |
| than | וּגְבֹהִ֖ים | ûgĕbōhîm | oo-ɡeh-voh-HEEM |
| they. | עֲלֵיהֶֽם׃ | ʿălêhem | uh-lay-HEM |