அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.
அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவைகளைக் கொன்றுபோடப் பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.
இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?
கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.
தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என் ஜனத்தில் சொல்லுகிற பாவிகளெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள்.
ஏதோமில் மீதியானவர்களையும் என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,
அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களிலிருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேனென்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.
என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.
| I saw | רָאִ֨יתִי | rāʾîtî | ra-EE-tee |
| אֶת | ʾet | et | |
| the Lord | אֲדֹנָ֜י | ʾădōnāy | uh-doh-NAI |
| standing | נִצָּ֣ב | niṣṣāb | nee-TSAHV |
| upon | עַֽל | ʿal | al |
| the altar: | הַמִּזְבֵּ֗חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
| and he said, | וַיֹּאמֶר֩ | wayyōʾmer | va-yoh-MER |
| Smite | הַ֨ךְ | hak | hahk |
| the lintel | הַכַּפְתּ֜וֹר | hakkaptôr | ha-kahf-TORE |
| of the door, that the posts | וְיִרְעֲשׁ֣וּ | wĕyirʿăšû | veh-yeer-uh-SHOO |
| may shake: | הַסִּפִּ֗ים | hassippîm | ha-see-PEEM |
| and cut | וּבְצַ֙עַם֙ | ûbĕṣaʿam | oo-veh-TSA-AM |
| them in the head, | בְּרֹ֣אשׁ | bĕrōš | beh-ROHSH |
| all | כֻּלָּ֔ם | kullām | koo-LAHM |
| of them; and I will slay | וְאַחֲרִיתָ֖ם | wĕʾaḥărîtām | veh-ah-huh-ree-TAHM |
| the last | בַּחֶ֣רֶב | baḥereb | ba-HEH-rev |
| of them with the sword: | אֶהֱרֹ֑ג | ʾehĕrōg | eh-hay-ROɡE |
| he that fleeth | לֹֽא | lōʾ | loh |
| of them shall not | יָנ֤וּס | yānûs | ya-NOOS |
| flee away, | לָהֶם֙ | lāhem | la-HEM |
| and he that escapeth | נָ֔ס | nās | nahs |
| of them shall not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| be delivered. | יִמָּלֵ֥ט | yimmālēṭ | yee-ma-LATE |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| פָּלִֽיט׃ | pālîṭ | pa-LEET |