சூழல் வசனங்கள் அப்போஸ்தலர் 4:10
அப்போஸ்தலர் 4:1

அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,

καὶ, ὁ, τοῦ, καὶ
அப்போஸ்தலர் 4:2

அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு,

καὶ, ἐν, τῷ, Ἰησοῦ, ἐκ, νεκρῶν
அப்போஸ்தலர் 4:3

அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.

καὶ, καὶ
அப்போஸ்தலர் 4:4

வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.

καὶ, ὁ
அப்போஸ்தலர் 4:5

மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாΰிகளும் மூப்பரும் வேதபாரகரும்,

καὶ, καὶ
அப்போஸ்தலர் 4:6

பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும்,

καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, ἐκ
அப்போஸ்தலர் 4:7

பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, அவர்களை நடுவே நிறுத்தி, நீங்கள் எந்த வல்லமையினாலே இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.

καὶ, ἐν, τῷ, ἐν, ὀνόματι, ὑμεῖς
அப்போஸ்தலர் 4:8

அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியிலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,

τοῦ, καὶ, τοῦ
அப்போஸ்தலர் 4:9

பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால்,

ἐν, οὗτος
அப்போஸ்தலர் 4:11

வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.

ὁ, ὁ, ὑμῶν, ὁ
அப்போஸ்தலர் 4:12

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

καὶ, ἐν, ἐν, ἐν
அப்போஸ்தலர் 4:13

பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.

τοῦ, καὶ, καὶ, ὅτι, καὶ, ὅτι, τῷ, Ἰησοῦ
அப்போஸ்தலர் 4:15

அப்பொழுது அவர்களை ஆலோசனை சங்கத்தை விட்டுப் போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:

τοῦ
அப்போஸ்தலர் 4:16

இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிற வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.

ὅτι, γνωστὸν, πᾶσιν, καὶ
அப்போஸ்தலர் 4:17

ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்த வேண்டுமென்று சொல்லிக்கொண்டு,

τῷ, ὀνόματι, τούτῳ
அப்போஸ்தலர் 4:18

அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.

καὶ, τῷ, ὀνόματι, τοῦ, Ἰησοῦ
அப்போஸ்தலர் 4:19

பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

ὁ, καὶ, ἐνώπιον, τοῦ, ὑμῶν, τοῦ
அப்போஸ்தலர் 4:20

நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.

καὶ
அப்போஸ்தலர் 4:21

நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களை தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.

ὅτι, τῷ
அப்போஸ்தலர் 4:22

அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.

ὁ, ὃν
அப்போஸ்தலர் 4:23

அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.

καὶ, καὶ
அப்போஸ்தலர் 4:24

அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.

καὶ, ὁ, ὁ, καὶ, καὶ, καὶ, ἐν
அப்போஸ்தலர் 4:25

புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,

ὁ, τοῦ, καὶ
அப்போஸ்தலர் 4:26

கர்த்தருக்கு விரோதமாகவும், தேவனுடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.

καὶ, τοῦ, καὶ, τοῦ, Χριστοῦ
அப்போஸ்தலர் 4:27

அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,

ὃν, καὶ, καὶ
அப்போஸ்தலர் 4:28

ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.

καὶ
அப்போஸ்தலர் 4:29

இப்பொழுதும், கர்த்தாவே அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,

καὶ, καὶ
அப்போஸ்தலர் 4:30

உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.

ἐν, τῷ, καὶ, καὶ, τοῦ, τοῦ, Ἰησοῦ
அப்போஸ்தலர் 4:31

அவர்கள் ஜெபம்பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரிமாய்ச் சொன்னார்கள்.

καὶ, ὁ, ἐν, καὶ, καὶ, τοῦ
அப்போஸ்தலர் 4:32

விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.

καὶ, καὶ
அப்போஸ்தலர் 4:33

கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.

καὶ, τοῦ, Ἰησοῦ
அப்போஸ்தலர் 4:34

நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவர்களை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,

ἐν
அப்போஸ்தலர் 4:35

அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.

καὶ
அப்போஸ்தலர் 4:36

சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,

ὁ, τῷ
அப்போஸ்தலர் 4:37

தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.

καὶ
Be
it
γνωστὸνgnōstongnoh-STONE
known
ἔστωestōA-stoh
unto
you
πᾶσινpasinPA-seen
all,
ὑμῖνhyminyoo-MEEN
and
καὶkaikay
to
all
παντὶpantipahn-TEE
the
τῷtoh
people
λαῷlaōla-OH
of
Israel,
Ἰσραὴλisraēlees-ra-ALE
that
ὅτιhotiOH-tee
by
ἐνenane
the
τῷtoh
name
ὀνόματιonomatioh-NOH-ma-tee
of
Jesus
Ἰησοῦiēsouee-ay-SOO
Christ
Χριστοῦchristouhree-STOO
of

Nazareth,
τοῦtoutoo

Ναζωραίουnazōraiouna-zoh-RAY-oo
whom
ὃνhonone
ye
ὑμεῖςhymeisyoo-MEES
crucified,
ἐσταυρώσατεestaurōsateay-sta-ROH-sa-tay
whom
ὃνhonone
God
hooh
raised
θεὸςtheosthay-OSE
from
ἤγειρενēgeirenA-gee-rane
the
dead,
ἐκekake
even
by
νεκρῶνnekrōnnay-KRONE
him
doth
this
here
ἐνenane
man
τούτῳtoutōTOO-toh
stand
οὗτοςhoutosOO-tose
before
παρέστηκενparestēkenpa-RAY-stay-kane
you
ἐνώπιονenōpionane-OH-pee-one
whole.
ὑμῶνhymōnyoo-MONE


ὑγιήςhygiēsyoo-gee-ASE