சூழல் வசனங்கள் அப்போஸ்தலர் 12:19
அப்போஸ்தலர் 12:1

அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;

δὲ, Ἡρῴδης, ἀπὸ, τῆς
அப்போஸ்தலர் 12:2

யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.

δὲ
அப்போஸ்தலர் 12:3

அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.

καὶ, καὶ, δὲ
அப்போஸ்தலர் 12:4

அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.

καὶ, εἰς, αὐτὸν
அப்போஸ்தலர் 12:5

அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்படிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.

δὲ, τῆς
அப்போஸ்தலர் 12:6

ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு. இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

δὲ, αὐτὸν, Ἡρῴδης, τῆς, τὴν
அப்போஸ்தலர் 12:7

அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான் அவனுடைய சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.

καὶ, καὶ, δὲ, τὴν, αὐτὸν, καὶ
அப்போஸ்தலர் 12:8

தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.

καὶ, δὲ, καὶ, καὶ
அப்போஸ்தலர் 12:9

அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.

καὶ, καὶ, δὲ
அப்போஸ்தலர் 12:10

அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.

δὲ, καὶ, τὴν, τὴν, τὴν, εἰς, τὴν, καὶ, καὶ
அப்போஸ்தலர் 12:11

பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.

καὶ, καὶ, καὶ, τῆς
அப்போஸ்தலர் 12:12

அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

τὴν, τῆς, καὶ
அப்போஸ்தலர் 12:13

பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள்.

δὲ, τὴν
அப்போஸ்தலர் 12:14

அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.

καὶ, τὴν, ἀπὸ, τῆς, δὲ
அப்போஸ்தலர் 12:15

அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.

δὲ, δὲ
அப்போஸ்தலர் 12:16

பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.

δὲ, δὲ, αὐτὸν, καὶ
அப்போஸ்தலர் 12:17

அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப்போனான்.

δὲ, αὐτὸν, τῆς, δὲ, καὶ, καὶ, εἰς
அப்போஸ்தலர் 12:18

பொழுது விடிந்தபின்பு பேதுருவைக் குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.

δὲ
அப்போஸ்தலர் 12:20

அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர் பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்,

δὲ, καὶ, δὲ, καὶ, τὴν, ἀπὸ, τῆς
அப்போஸ்தலர் 12:21

குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.

δὲ, Ἡρῴδης, καὶ
அப்போஸ்தலர் 12:22

அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.

δὲ, καὶ
அப்போஸ்தலர் 12:23

அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.

δὲ, αὐτὸν, τὴν, καὶ
அப்போஸ்தலர் 12:24

தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.

δὲ, καὶ
அப்போஸ்தலர் 12:25

பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.

δὲ, καὶ, τὴν, καὶ
And
Ἡρῴδηςhērōdēsay-ROH-thase
when
Herod
δὲdethay
had
sought
for
ἐπιζητήσαςepizētēsasay-pee-zay-TAY-sahs
him,
αὐτὸνautonaf-TONE
and
καὶkaikay
found
him
μὴmay
not,
εὑρὼνheurōnave-RONE
he
examined
ἀνακρίναςanakrinasah-na-KREE-nahs
the
τοὺςtoustoos
keepers,
φύλακαςphylakasFYOO-la-kahs
and
commanded
that
ἐκέλευσενekeleusenay-KAY-layf-sane
they
should
be
put
to
death.
ἀπαχθῆναιapachthēnaiah-pahk-THAY-nay
And
καὶkaikay
he
went
down
κατελθὼνkatelthōnka-tale-THONE
from
ἀπὸapoah-POH
Judaea
τῆςtēstase
to
Ἰουδαίαςioudaiasee-oo-THAY-as

εἰςeisees
Caesarea,
τὴνtēntane
and
there
abode.
Καισάρειανkaisareiankay-SA-ree-an


διέτριβενdietribenthee-A-tree-vane