Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 13:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 13 ஓசியா 13:6

ஓசியா 13:6
தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.

Tamil Indian Revised Version
தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்களுடைய இருதயம் மேட்டிமையானது; அதினால் என்னை மறந்தார்கள்.

Tamil Easy Reading Version
நான் இஸ்ரவேலர்களுக்கு உணவு கொடுத்தேன். அவர்கள் அந்த உணவை உண்டார்கள். அவர்கள் தம் வயிறு நிறைந்து திருப்தி அடைந்தார்கள். அவர்கள் வீண் பெருமை அடைந்தார்கள். அவர்கள் என்னை மறந்தார்கள்!

திருவிவிலியம்
⁽வளமான மேய்ச்சல் கிடைத்தபடியால்␢ அவர்கள் மனநிறைவுற்றார்கள்;␢ மன நிறைவடைந்ததும் செருக்குற்று␢ என்னை மறந்து போனார்கள்.⁾

Hosea 13:5Hosea 13Hosea 13:7

King James Version (KJV)
According to their pasture, so were they filled; they were filled, and their heart was exalted; therefore have they forgotten me.

American Standard Version (ASV)
According to their pasture, so were they filled; they were filled, and their heart was exalted: therefore have they forgotten me.

Bible in Basic English (BBE)
When I gave them food they were full, and their hearts were full of pride, and they did not keep me in mind.

Darby English Bible (DBY)
According to their pasture, they became full; they became full, and their heart was exalted: therefore have they forgotten me.

World English Bible (WEB)
According to their pasture, so were they filled; They were filled, and their heart was exalted. Therefore they have forgotten me.

Young’s Literal Translation (YLT)
According to their feedings they are satiated, They have been satiated, And their heart is lifted up, Therefore they have forgotten Me,

ஓசியா Hosea 13:6
தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.
According to their pasture, so were they filled; they were filled, and their heart was exalted; therefore have they forgotten me.

כְּמַרְעִיתָם֙kĕmarʿîtāmkeh-mahr-ee-TAHM
וַיִּשְׂבָּ֔עוּwayyiśbāʿûva-yees-BA-oo
שָׂבְע֖וּśobʿûsove-OO
וַיָּ֣רָםwayyāromva-YA-rome
לִבָּ֑םlibbāmlee-BAHM
עַלʿalal
כֵּ֖ןkēnkane
שְׁכֵחֽוּנִי׃šĕkēḥûnîsheh-hay-HOO-nee

இணை வசனம்

Deuteronomy 32:13
பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்.

Hosea 10:1
இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான படங்களைச் சிலைகளைச் செய்கிறார்கள்.

Hosea 8:4
அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.

Hosea 2:13
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 2:31
சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.

Isaiah 17:10
உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல் உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும்,

Psalm 10:4
துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.

Nehemiah 9:35
அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.

Nehemiah 9:25
அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும் ஏராளமான திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.

Deuteronomy 32:18
உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.

Deuteronomy 8:12
நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும்,

Deuteronomy 6:10
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,


Tags தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள் திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று அதினால் என்னை மறந்தார்கள்
ஓசியா 13:6 Concordance ஓசியா 13:6 Interlinear ஓசியா 13:6 Image