ஆதியாகமம் 18:23
அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆபிரகாம் அருகில் வந்து: துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பீரோ?
Tamil Easy Reading Version
பிறகு ஆபிரகாம் கர்த்தரிடம் நெருங்கி வந்து, “கர்த்தாவே! நீர் தீயவர்களை அழிக்கும்போதே நல்லவர்களையும் அழிக்கப்போகிறீரா?
திருவிவிலியம்
ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?
King James Version (KJV)
And Abraham drew near, and said, Wilt thou also destroy the righteous with the wicked?
American Standard Version (ASV)
And Abraham drew near, and said, Wilt thou consume the righteous with the wicked?
Bible in Basic English (BBE)
And Abraham came near, and said, Will you let destruction come on the upright with the sinners?
Darby English Bible (DBY)
And Abraham drew near, and said, Wilt thou also cause the righteous to perish with the wicked?
Webster’s Bible (WBT)
And Abraham drew near, and said, Wilt thou also destroy the righteous with the wicked?
World English Bible (WEB)
Abraham drew near, and said, “Will you consume the righteous with the wicked?
Young’s Literal Translation (YLT)
And Abraham draweth nigh and saith, `Dost Thou also consume righteous with wicked?
ஆதியாகமம் Genesis 18:23
அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?
And Abraham drew near, and said, Wilt thou also destroy the righteous with the wicked?
| וַיִּגַּ֥שׁ | wayyiggaš | va-yee-ɡAHSH | |
| אַבְרָהָ֖ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR | |
| הַאַ֣ף | haʾap | ha-AF | |
| תִּסְפֶּ֔ה | tispe | tees-PEH | |
| צַדִּ֖יק | ṣaddîq | tsa-DEEK | |
| עִם | ʿim | eem | |
| רָשָֽׁע׃ | rāšāʿ | ra-SHA |
இணை வசனம்
Numbers 16:22
அப்பொழுது அவர்கள் முகங்குப்புறவிழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.
2 Samuel 24:17
ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.
Genesis 20:4
அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?
Psalm 11:4
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.
James 5:17
எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
Hebrews 10:22
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
Romans 3:5
நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?
Jeremiah 30:21
அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்து வரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Psalm 73:28
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
Job 34:17
நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
Job 8:3
தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?
Genesis 18:25
துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத்தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
Tags அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ
ஆதியாகமம் 18:23 Concordance ஆதியாகமம் 18:23 Interlinear ஆதியாகமம் 18:23 Image