1 சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள், தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள்.

2 உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர். பூமியெங்கும் அவர் பேரரசர்.

3 பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார். அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார்.

4 தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார். தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார்.

5 எக்காளமும் கொம்பும் முழங்க, கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார்.

6 தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள். நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.

7 அகில உலகத்திற்கும் தேவனே அரசர். துதிப் பாடல்களைப் பாடுங்கள்.

8 பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார். எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார்.

9 ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத் தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள். எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள். தேவனே எல்லோரிலும் மேன்மையானவர்.

சங்கீதம் 47 ERV IRV TRV