1 ⁽ஆண்டவரே!␢ என் முழுமனத்துடன்␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ தெய்வங்கள் முன்னிலையில்␢ உம்மைப் புகழ்வேன்.⁾

2 ⁽உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி␢ உம்மைத் தாள் பணிவேன்;␢ உம் பேரன்பையும்␢ உண்மையையும் முன்னிட்டு␢ உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;␢ ஏனெனில், அனைத்திற்கும் மேலாக␢ உம் பெயரையும் உம் வாக்கையும்␢ மேன்மையுறச் செய்துள்ளீர்.⁾

3 ⁽நான் மன்றாடிய நாளில்␢ எனக்குச் செவிசாய்த்தீர்;␢ என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.⁾

4 ⁽ஆண்டவரே! நீர்␢ திருவாய் மலர்ந்த சொற்களைப்␢ பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு␢ உம்மைப் போற்றுவர்.⁾

5 ⁽ஆண்டவரே! உம் வழிகளை␢ அவர்கள் புகழ்ந்து பாடுவர்;␢ ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!⁾

6 ⁽ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்;␢ எனினும் நலிந்தோரைக்␢ கண்ணோக்குகின்றீர்;␢ ஆனால், செருக்குற்றோரைத்␢ தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர்.⁾

7 ⁽நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்,␢ என் உயிரைக் காக்கின்றீர்;␢ என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக␢ உமது கையை நீட்டுகின்றீர்;␢ உமது வலக்கையால்␢ என்னைக் காப்பாற்றுகின்றீர்.⁾

8 ⁽நீர் வாக்களித்த அனைத்தையும்␢ எனக்கெனச் செய்து முடிப்பீர்;␢ ஆண்டவரே! என்றும் உள்ளது␢ உமது பேரன்பு;␢ உம் கைவினைப் பொருளைக்␢ கைவிடாதேயும்.⁾

சங்கீதம் 138 ERV IRV TRV