1 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.

2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன். நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மை யையும் துதிப்பேன். உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.

3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன். நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.

4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள்.

5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள். ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.

6 தேவன் மிக முக்கியமானவர். ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படு கிறார். பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.

7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும். என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.

8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும். கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!

சங்கீதம் 138 ERV IRV TRV