1 ⁽தீவுகளே, என் திருமுன்னே␢ மௌனமாயிருங்கள்;␢ மக்களினங்கள் தம் ஆற்றலைப்␢ புதுப்பிப்பார்களாக!␢ அருகில் வந்து பேசுவார்களாக!␢ நீதித்தீர்ப்புக்காக␢ நாம் ஒருங்கே கூடிவருவோமாக!⁾

2 ⁽சென்றவிடமெல்லாம் சிறப்புறும்␢ நேர்மையாளனைக்␢ கிழக்கிலிருந்து எழும்பச் செய்தவர் யார்?␢ மக்களினங்களை␢ அவனிடம் கையளித்து␢ அரசர்களை␢ அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்?␢ அவன் வாள் அவர்களைப்␢ புழுதியாக்குகிறது;␢ அவன் வில் அவர்களைப்␢ பதர்போல் பறக்கச் செய்கிறது.⁾

3 ⁽அவன் அவர்களைத்␢ துரத்திச் செல்கின்றான்;␢ எதிர்ப்பு எதுவுமின்றி␢ முன்னேறுகின்றான்;␢ பாதை வழியே␢ காலடி படாது செல்கின்றான்.⁾

4 ⁽இவற்றைச்செய்து முடித்தவர் யார்?␢ தொடக்கத்திலிருந்தே␢ தலைமுறைகளை அழைத்தவரன்றோ!␢ ஆண்டவராகிய நானே முதலானவர்!␢ முடிவானவற்றுடன்␢ இருக்கப் போவதும் நானே!⁾

5 ⁽தீவு நாட்டினர்␢ அதைப் பார்த்து அஞ்சினர்;␢ உலகின் எல்லைகளில் வாழ்வோர்␢ நடுநடுங்கினர்; எனவே␢ அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர்.⁾

6 ⁽ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு␢ உதவி செய்கின்றார்;␢ தம் அடுத்தவரிடம்,␢ ‘திடன்கொள்’ என்கின்றார்.⁾

7 ⁽கைவினைஞர் பொற்கொல்லருக்கு␢ ஊக்கமூட்டுகின்றார்;␢ சுத்தியலால் தட்டுபவர்␢ சம்மட்டியால் அடிப்பவரிடம்,␢ பற்றவைப்பதுபற்றி, ‘நன்று’␢ என்று சொல்லி␢ உற்சாகப்படுத்துகின்றார்;␢ அசையாதபடி ஆணிகளால்␢ அதை இறுக்குகின்றார்.⁾

8 ⁽நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே!␢ நான் தெரிந்தெடுத்த யாக்கோபே!␢ என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே!⁾

9 ⁽உலகின் எல்லைகளினின்று␢ உன்னை அழைத்து வந்தேன்;␢ தொலைநாடுகளினின்று␢ உன்னை அழைத்தேன்;␢ ‘நீ என் அடியவன்;␢ நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்;␢ உன்னை நான் தள்ளிவிடவில்லை’␢ என்று சொன்னேன்.⁾

10 ⁽அஞ்சாதே,␢ நான் உன்னுடன் இருக்கிறேன்;␢ கலங்காதே, நான் உன் கடவுள்,␢ நான் உனக்கு வலிமை அளிப்பேன்;␢ உதவி செய்வேன்;␢ என் நீதியின் வலக்கரத்தால்␢ உன்னைத் தாங்குவேன்.⁾

11 ⁽உனக்கெதிராய்␢ வெகுண்டெழுவோர் அனைவரும்␢ மானக்கேடுற்று இழிநிலை அடைவர்;␢ உன்னை எதிர்த்து வழக்காடுவோர்␢ இல்லாதொழிவர்.⁾

12 ⁽உன்னை எதிர்த்துப் போராடியோரை␢ நீ தேடுவாய்; ஆனால்␢ அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்;␢ உன்னை எதிர்த்துப் போரிட்டோர்␢ ஒழிந்து போவர்.⁾

13 ⁽ஏனெனில் நானே␢ உன் கடவுளாகிய ஆண்டவர்;␢ உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து,␢ “அஞ்சாதே, உனக்குத்␢ துணையாய் இருப்பேன்” என்று␢ உன்னிடம் சொல்பவரும் நானே.⁾

14 ⁽“யாக்கோபு என்னும் புழுவே,␢ இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே,␢ அஞ்சாதிரு; நான் உனக்குத்␢ துணையாய் இருப்பேன்,”␢ என்கிறார் ஆண்டவர்.␢ இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.⁾

15 ⁽இதோ, நான் உன்னைப்␢ புதிய கூர்மையான␢ போரடிக்கும் கருவியாக்குவேன்.␢ நீ மலைகளைப்␢ போரடித்து நொறுக்குவாய்;␢ குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.⁾

16 ⁽அவற்றைத் தூற்றுவாய்,␢ காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்;␢ புயல் அவற்றைச் சிதறடிக்கும்;␢ ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்;␢ இஸ்ரயேலின் தூயவரில்␢ மேன்மை அடைவாய்.⁾

17 ⁽ஏழைகளும் வறியோரும்␢ நீரைத் தேடுகின்றனர்;␢ அது கிடைக்கவில்லை.␢ அவர்கள் தாகத்தால்␢ நாவறண்டு போகின்றனர்;␢ ஆண்டவராகிய நான்␢ அவர்களுக்குப் பதிலளிப்பேன்;␢ இஸ்ரயேலின் கடவுளாகிய நான்␢ அவர்களைக் கைவிடமாட்டேன்.⁾

18 ⁽பொட்டல் மேடுகளைப் பிளந்து␢ ஆறுகள் தோன்றச் செய்வேன்;␢ பள்ளத்தாக்குகளில்␢ நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்;␢ பாலைநிலத்தை␢ நீர்த் தடாகங்களாகவும்␢ வறண்ட நிலத்தை␢ நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.⁾

19 ⁽பாலைநிலத்தில்␢ கேதுரு மரங்களை வளரச் செய்வேன்;␢ சித்திம் மரம், மிருதுச் செடி,␢ ஒலிவ மரம் ஆகியன␢ தோன்றச் செய்வேன்;␢ பாழ்நிலத்தில்␢ தேவதாரு மரங்களையும்,␢ புன்னை மரங்களையும்,␢ ஊசியிலை மரங்களையும் வைப்பேன்.⁾

20 ⁽அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால்␢ இதைச்செய்தார் என்றும்␢ இஸ்ரயேலின் தூயவர்␢ அதைப் படைத்தார் என்றும்␢ மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்;␢ ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.⁾

21 ⁽‘உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்’␢ என்கிறார் ஆண்டவர்.␢ ‘உங்கள் ஆதாரங்களை␢ எடுத்துரையுங்கள்’, என்கிறார்␢ யாக்கோபின் அரசர்.⁾

22 ⁽அத்தெய்வங்கள் அருகில் வந்து,␢ நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்;␢ முன்னே நடந்தவற்றை␢ எடுத்துரைக்கட்டும்;␢ நாம் சிந்தித்து அவற்றின்␢ இறுதி விளைவை அறிந்து கொள்வோம்;␢ இல்லாவிடில் வரவிருப்பவற்றை␢ நமக்கு எடுத்துக்கூறட்டும்.⁾

23 ⁽“நீங்கள் தெய்வங்கள் என␢ நாங்கள் உணரும்பொருட்டு␢ வருங்காலத்தில் நடப்பனவற்றை␢ எங்களுக்குக் கூறுங்கள்;␢ நன்மையாவது தீமையாவது␢ செய்யுங்கள்;␢ நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு␢ திகைத்து நிற்போம்.⁾

24 ⁽இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை!␢ உங்கள் செயலும் ஒன்றுமில்லாமையே!␢ உங்களைத் தேர்ந்துகொள்பவன்␢ வெறுக்கத்தக்கவன்”.⁾

25 ⁽நான் வடக்கிலிருந்து␢ ஒருவனை எழும்பச் செய்தேன்;␢ அவன் கதிரவன் உதிக்கும்␢ திசையிலிருந்து வந்துவிட்டான்;␢ அவன் என் பெயரைப் போற்றுவான்;␢ ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும்␢ குயவன் களிமண்ணை மிதிப்பது போலும்␢ அவன் ஆளுநர்களை நடத்துவான்.⁾

26 ⁽நாங்கள் அறியும்படி␢ தொடக்கத்திலிருந்தே␢ இதை அறிவித்தவர் யார்?␢ ‘அது சரி’ என்று␢ நாங்கள் சொல்லும்முன்னரே␢ உரைத்தவர் யார்?␢ அப்படி எதுவும் அறிவிக்கவில்லை;␢ முன்னுரைக்கவில்லை;␢ நீங்கள் பேசியதை␢ யாரும் கேட்டதுமில்லை.⁾

27 ⁽“இதோ வருகிறார்கள்” என்று␢ முதன்முதலில் சீயோனுக்கு␢ அறிவித்தது நானே!␢ நற்செய்தியாளரை எருசலேமுக்கு␢ அனுப்பியதும் நானே!⁾

28 ⁽நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்;␢ எதையும் காணவில்லை;␢ அவற்றுள் அறிவுரை வழங்கவோ␢ என் வினாவுக்கு மறுமொழி தரவோ␢ எத்தெய்வமும் இல்லை.⁾

29 ⁽இதோ அவை அனைத்தும்␢ ஒன்றுமில்லாமையே!␢ அவற்றின் செயல்களும்␢ ஒன்றுமில்லாமையே!␢ அவற்றின் படிமங்களோ␢ வெறும் காற்றும் வெறுமையுமே!⁾

ஏசாயா 41 ERV IRV TRV