1 ⁽தெய்வங்களுக்கெல்லாம்␢ இறைவனாம்␢ ஆண்டவர் பேசினார்;␢ கதிரவன் எழும் முனையினின்று␢ மறையும் முனைவரை பரந்துள்ள␢ உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.⁾

2 ⁽எழிலின் நிறைவாம் சீயோனின்று,␢ ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள்.⁾

3 ⁽நம் கடவுள் வருகின்றார்;␢ மௌனமாய் இருக்கமாட்டார்;␢ அவருக்கு முன்னே,␢ சுட்டெரிக்கும் தழல் நெருப்பு!␢ அவரைச் சுற்றிலும்,␢ கடுமையான புயற்காற்று!⁾

4 ⁽உயர் வானங்களையும் பூவுலகையும்␢ அவர் அழைத்து,␢ தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார்.⁾

5 ⁽‛பலியிட்டு என்னோடு␢ உடன்படிக்கை செய்துகொண்ட␢ என் அடியார்களை␢ என்முன் ஒன்று கூட்டுங்கள்.’⁾

6 ⁽வான்வெளி அவரது நீதியை␢ எடுத்தியம்பும்;␢ ஏனெனில், கடவுள்தாமே␢ நீதிபதியாய் வருகின்றார்! (சேலா)⁾

7 ⁽என் மக்களே, கேளுங்கள்;␢ நான் பேசுகின்றேன்;␢ இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச்␢ சான்றுகூறப் போகின்றேன்;␢ கடவுளாகிய நானே உன் இறைவன்;⁾

8 ⁽நீங்கள் கொண்டுவரும்␢ பலிகளை முன்னிட்டு␢ நான் உங்களைக் கண்டிக்கவில்லை;␢ உங்கள் எரிபலிகள் எப்போதும்␢ என் முன்னிலையில் உள்ளன.⁾

9 ⁽உங்கள் வீட்டின் காளைகளையோ,␢ உங்கள் தொழுவத்தின்␢ ஆட்டுக்கிடாய்களையோ,␢ நான் ஏற்றுக்கொள்வதில்லை.⁾

10 ⁽ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம்␢ என் உடைமைகள்;␢ ஓராயிரம் குன்றுகளில் மேயும்␢ கால்நடைகளும் என்னுடையவை.⁾

11 ⁽குன்றத்துப் பறவை அனைத்தையும்␢ நான் அறிவேன்;␢ சமவெளியில் நடமாடும் யாவும்␢ என்னுடையவை.⁾

12 ⁽எனக்குப் பசியெடுத்தால்␢ நான் உங்களைக் கேட்கப் போவதில்லை;␢ ஏனெனில், உலகும்␢ அதில் நிறைந்துள்ள யாவும்␢ என்னுடையவையே.⁾

13 ⁽எருதுகளின் இறைச்சியை␢ நான் உண்பேனோ?␢ ஆட்டுக்கிடாய்களின்␢ குருதியைக் குடிப்பேனோ?⁾

14 ⁽கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்;␢ உன்னதர்க்கு உங்கள்␢ நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.⁾

15 ⁽துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்;␢ உங்களைக் காத்திடுவேன்;␢ அப்போது, நீங்கள் என்னை␢ மேன்மைப்படுத்துவீர்கள்.⁾

16 ⁽ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து␢ இவ்வாறு கூறுகின்றார்;␢ ‛என் விதிமுறைகளை ஓதுவதற்கு␢ உங்களுக்கு என்ன தகுதி?␢ என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு␢ உங்களுக்கு என்ன அருகதை?⁾

17 ⁽நீங்களோ ஒழுங்குமுறையை␢ வெறுக்கின்றீர்கள்;␢ என் கட்டளைகளைத்␢ தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்.⁾

18 ⁽திருடர்களைக் கண்டால்␢ அவர்களோடு விருப்புடன்␢ சேர்ந்து கொள்கின்றீர்கள்;␢ கற்பு நெறி தவறியவர்களோடும்␢ உங்களுக்கு உறவு உண்டு.⁾

19 ⁽உங்கள் வாய் உரைப்பது தீமையே; § உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே.⁾

20 ⁽உங்கள் சகோதரரைப் பற்றி␢ இழிவாகப் பேசுகின்றீர்கள்;␢ உங்கள் தாயின் மக்களைப்பற்றி␢ அவதூறு பேசுகின்றீர்கள்.⁾

21 ⁽இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும்,␢ நான் மௌனமாய் இருந்தேன்;␢ நானும் உங்களைப் போன்றவர் என␢ எண்ணிக் கொண்டீர்கள்;␢ ஆனால், இப்பொழுது␢ உங்களைக் கண்டிக்கின்றேன்;␢ உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன்␢ ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.⁾

22 ⁽கடவுளை மறந்தோரே!␢ இதைக் கண்டுணருங்கள்;␢ இல்லையேல், நான் உங்களைப்␢ பீறிப் போடுவேன்;␢ உங்களை விடுவிக்க யாரும் இரார்.⁾

23 ⁽நன்றிப்பலி செலுத்துவோர்␢ என்னை மேன்மைப்படுத்துவர்.␢ தம் வழியைச் செம்மைப்படுத்துவோர்␢ கடவுளாம் நான் அருளும்␢ மீட்பைக் கண்டடைவர்.⁾

சங்கீதம் 50 ERV IRV TRV