1 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை. உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.

2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார். ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.

3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்? கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்? யார் அங்கு வழிபட முடியும்?

4 தீயவை செய்யாத ஜனங்களும், பரிசுத்த இருதயம் உடையோரும், பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப் பயன்படுத்தாதோரும், பொய்யும், பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.

5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள். அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.

6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள். யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.

7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே! திறவுங்கள்! மகிமை வாய்ந்த அரசர் உள்ளே வருவார்.

8 யார் இந்த மகிமைமிக்க அரசர்? கர்த்தரே அந்த அரசர். அவரே வல்லமையுள்ள வீரர். கர்த்தரே அந்த அரசர். அவரே போரின் நாயகன்.

9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே, திறவுங்கள்! மகிமை மிக்க அரசர் உள்ளே வருவார்.

10 யார் அந்த மகிமை மிக்க அரசர்? சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த அரசர். அவரே மகிமை மிக்க அரசர்.