1 ⁽ஆண்டவரே! என் மன்றாட்டைக்␢ கேட்டருளும்; நீர் நம்பிக்கைக்கு␢ உரியவராய் இருப்பதால்,␢ உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும்␢ மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;␢ உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.⁾

2 ⁽தண்டனைத் தீர்ப்புக்கு␢ உம் அடியானை இழுக்காதேயும்;␢ ஏனெனில், உயிர் வாழ்வோர் எவரும்␢ உமது திருமுன் நீதிமான் இல்லை.⁾

3 ⁽எதிரி என்னைத் துரத்தினான்;␢ என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்;␢ என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல்␢ என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.⁾

4 ⁽எனவே, என்னுள்ளே என் மனம்␢ ஒடுங்கிப் போயிற்று;␢ என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.⁾

5 ⁽பண்டைய நாள்களை␢ நான் நினைத்துக் கொள்கின்றேன்;␢ உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச்␢ சிந்தனை செய்கின்றேன்;␢ உம் கைவினைகளைப் பற்றி␢ ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.⁾

6 ⁽உம்மை நோக்கி என் கைகளை␢ உயர்த்துகின்றேன்;␢ வறண்ட நிலம்␢ நீருக்காகத் தவிப்பது போல்␢ என் உயிர் உமக்காகத்␢ தவிக்கின்றது. (சேலா)⁾

7 ⁽ஆண்டவரே! விரைவாக␢ எனக்குச் செவிசாய்த்தருளும்;␢ ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது;␢ என்னிடமிருந்து உம் முகத்தை␢ மறைத்துக் கொள்ளாதேயும்;␢ இல்லையெனில், படுகுழி செல்வோருள்␢ ஒருவராகிவிடுவேன்.⁾

8 ⁽உமது பேரன்பை நான்␢ வைகறையில் கண்டடையச் செய்யும்;␢ ஏனெனில், உம்மீது␢ நம்பிக்கை வைத்துள்ளேன்;␢ நான் நடக்க வேண்டிய அந்த வழியை␢ எனக்குக் காட்டியருளும்;␢ ஏனெனில், உம்மை நோக்கி␢ என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.⁾

9 ⁽ஆண்டவரே!␢ என் எதிரிகளிடமிருந்து␢ என்னை விடுவித்தருளும்;␢ நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.⁾

10 ⁽உம் திருவுளத்தை நிறைவேற்ற␢ எனக்குக் கற்பித்தருளும்;␢ ஏனெனில், நீரே என் கடவுள்;␢ உமது நலமிகு ஆவி என்னைச்␢ செம்மையான வழியில் நடத்துவதாக!⁾

11 ⁽ஆண்டவரே!␢ உமது பெயரின் பொருட்டு␢ என் உயிரைக் காத்தருளும்!␢ உமது நீதியின் பொருட்டு என்னை␢ நெருக்கடியினின்று விடுவித்தருளும்.⁾

12 ⁽உமது பேரன்பை முன்னிட்டு␢ என் பகைவரை அழித்துவிடும்;␢ என் பகைவர் அனைவரையும்␢ ஒழித்துவிடும்;␢ ஏனெனில், நான் உமக்கே அடிமை!⁾

சங்கீதம் 143 ERV IRV TRV