1 ⁽நான் ஆண்டவரிடம் அடைக்கலம்␢ புகுந்துள்ளேன்;␢ நீங்கள் என்னிடம், ‛பறவையைப் போல␢ மலைக்குப் பறந்தோடிப் போ;⁾

2 ⁽ஏனெனில், இதோ பார்!␢ பொல்லார் வில்லை வளைக்கின்றனர்;␢ நாணில் அம்பு தொடுக்கின்றனர்;␢ நேரிய உள்ளத்தார்மீது␢ இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்;⁾

3 ⁽அடித்தளங்களே தகர்க்கப்படும்பொழுது,␢ நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?’␢ என்று சொல்வது எப்படி?⁾

4 ⁽ஆண்டவர் தம் தூய கோவிலில்␢ இருக்கின்றார்; அவரது அரியணை␢ விண்ணுலகில் இருக்கின்றது;␢ அவர் கண்கள் உற்று நோக்குகின்றன;␢ அவர் விழிகள்␢ மானிடரைச் சோதித்தறிகின்றன.⁾

5 ⁽ஆண்டவர் நேர்மையாளரையும்␢ பொல்லாரையும் சோதித்தறிகின்றார்;␢ வன்முறையில் நாட்டங்கொள்வோரை␢ அவர் வெறுக்கின்றார்.⁾

6 ⁽அவர் பொல்லார்மீது கரிநெருப்பும்␢ கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்;␢ பொசுக்கும் தீக்காற்றே␢ அவர்கள் குடிக்கும் பானமாகும்.⁾

7 ⁽ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர்␢ நேரிய செயல்களை விரும்புகின்றார்;␢ அவர்தம் திருமுகத்தை␢ நேர்மையாளர் காண்பர்.⁾

சங்கீதம் 11 ERV IRV TRV