1 அந்நாளில், தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:

2 ⁽“இஸ்ரயேலின் தலைவர்கள் தலைமை␢ தாங்கிச் செல்ல␢ மக்களும் தங்களை மனமுவந்து␢ அளிக்கின்றனர்.␢ ஆண்டவரைப் போற்றுங்கள்.!⁾

3 ⁽அரசர்களே, கேளுங்கள்!␢ இளவரசர்களே, செவிகொடுங்கள்.!␢ நான் ஆண்டவருக்குப் பண்␢ இசைப்பேன்.␢ இஸ்ரயேலின் கடவுளாகிய␢ ஆண்டவரின் புகழ்பாடுவேன்.⁾

4 ⁽ஆண்டவரே, நீர் சேயிரிலிருந்து␢ வெளிவந்தபோது,␢ நீர் ஏதொமின் வயல்வெளியைக்␢ கடந்தபோது,␢ நிலம் நடுங்கியது, வானம்␢ பொழிந்தது,␢ கார்மேகம் நீரைச் சொரிந்தது.⁾

5 ⁽ஆண்டவரின் முன்னிலையில்␢ மலைகள் நடுங்கின.␢ சீனாய் மலையே! நீயும்␢ இஸ்ரயேலின் கடவுளாகிய␢ ஆண்டவர்முன் நடுங்கினாய்.⁾

6 ⁽அனாத்தின் மகன் சம்காரின்␢ நாள்களிலும் யாவேலின்␢ நாள்களிலும் நெடுஞ்சாலைகள்␢ வெறுமையாகிக் கிடந்தன.␢ பயணிகள் சுற்றுப் பாதைகளில்␢ சென்றனர்.⁾

7 ⁽தெபோரா! நீ எழும்பும் வரை,␢ இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும்␢ வரை, இஸ்ரயேலின் சிற்றூர்கள்␢ வாழ்விழந்து கிடந்தன.⁾

8 ⁽வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து␢ கொள்ளப்பட்டதும்,␢ வாயில்களில் போர் வந்துற்றது.␢ இஸ்ரயேலின் நாற்பதாயிரம்␢ பேர்களுள் எவரிடம் கேடயமோ␢ ஈட்டியோ இருந்தது?⁾

9 ⁽என் இதயம் இஸ்ரயேலின்␢ படைத்தலைவர்களில் பெருமிதம்␢ கொள்கிறது. மக்கள் நடுவில்␢ தங்களை மனமுவந்து␢ அளித்தவர்கள் இவர்களே!␢ ஆண்டவரைப் போற்றுங்கள்!⁾

10 ⁽பெண் கழுதைகள் மீது␢ விரைந்து செல்வோரே!␢ விலைமிகு கம்பளத்தில்␢ வீற்றிருப்போரே!␢ பாதையில் பயணம் செய்வோரே!␢ பாடி மகிழுங்கள்!⁾

11 ⁽நீர்நிலைகளின் அருகிலிருந்து␢ எழும் பாடகர்குரல்␢ அங்கே ஆண்டவரின் வெற்றியைப்␢ பாடுகின்றது.␢ இஸ்ரயேல் ஊரக வாழ்வின்␢ பொலிவை முழங்குகின்றது.␢ அப்பொழுது, ஆண்டவரின் மக்கள்␢ நகர வாயில்களுக்கு␢ இறங்கிச் சென்றார்கள்.⁾

12 ⁽எழுந்திடு! தெபோரா! எழுந்திடு!␢ பாடல் ஒன்று பாடு!␢ எழுந்திடு! பாராக்கு! அபினோவாம்␢ புதல்வா! உன் கைதிகளை␢ இழுத்துச் சென்றிடு!⁾

13 ⁽அப்பொழுது, எஞ்சிய உயர்குடியினர்␢ பீடு நடைபோட்டனர்.␢ வலியோரை எதிர்த்து நிற்க␢ ஆண்டவரின் மக்கள் என்னிடம்␢ இறங்கி வந்தனர்.⁾

14 ⁽எப்ராயிமிலிருந்து அதன் மக்கள்␢ அமலேக்கிற்குப் போயினர்.␢ பென்யமின்! உன் பின்னால்␢ உன் மக்களும் மாக்கிரிலிருந்து␢ தலைவர்களும் செபுலோனிலிருந்து␢ தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.⁾

15 ⁽இசக்காரின் இளவரசர்கள்␢ தெபோராவுடன் சென்றனர்.␢ இசக்காரின் மக்கள் பாராக்குடன்␢ சென்றனர்; அவர்கள்␢ கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு␢ விரைந்தனர். ரூபனின்␢ பிரிவுகளிடையே விளைந்தது␢ மாபெரும் இதய சோதனையே!⁾

16 ⁽மந்தைகளில் இரைச்சலைக்␢ கேட்கவோ␢ தொழுவங்களிடையே நீ␢ நின்று விட்டாய்? ரூபனின்␢ பிரிவுகளிடையே விளைந்தது␢ மாபெரும் இதய சோதனையே!⁾

17 ⁽கிலயாது யோர்தானுக்கு␢ அப்பால் தங்கியது.␢ தாண்! நீ ஏன் கப்பல்களில்␢ தங்கிவிட்டாய்? ஆசேர்␢ கடற்கரைப்பகுதியில் தங்கி, அதன்␢ துறைமுகத்தில் குடியிருந்தான்.⁾

18 ⁽செபுலோன் மக்களோ தங்கள்␢ உயிரைப் பணயம் வைத்தனர்.␢ உயர் நிலத்து நப்தலியும் அவ்வாறே!⁾

19 ⁽மன்னர்கள் வந்து போரிட்டனர்.␢ கானானிய மன்னர்கள் தானாக்கில்␢ மெகிதோ நீர் நிலைகளில்␢ போரிட்டனர். கொள்ளைப்␢ பொருளாக வெள்ளி எதுவும்␢ கிடைக்கவில்லை.⁾

20 ⁽வானிலிருந்து விண்மீன்கள்␢ போரிட்டன!␢ தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன்␢ போரிட்டன!⁾

21 ⁽கீசோன் ஆறு அவர்களை அடித்துச்␢ சென்றது.␢ பெருக்கெடுத்து வரும் ஆறே␢ கீசோன் ஆறு.␢ என் உயிரே! வலிமையுடன்␢ பீடு நடை போடு!⁾

22 ⁽குதிரைகளின் குளம்புகள் நிலத்தை␢ அதிரச் செய்தன.␢ குதிரைகள் பாய்ந்து ஓடின;␢ வேகமாக விரைந்து ஓடின.⁾

23 ⁽ ‘மேரோசைச் சபியுங்கள்’␢ என்கிறார் ஆண்டவரின் தூதர்.␢ அதில் வாழ்வோரைக் கடுமையாகச்␢ சபியுங்கள். ஏனெனில் அவர்கள்␢ ஆண்டவருக்கு உதவி செய்ய␢ வரவில்லை. வலிமை மிக்கோருக்கு␢ எதிராக ஆண்டவருக்கு␢ உதவி செய்ய வரவில்லை.⁾

24 ⁽கேனியனான கெபேரின் மனைவி␢ யாவேல்! நீ பெண்களுள் பேறு␢ பெற்றவள்! கூடாரம்வாழ் பெண்களுள்␢ நீ பேறு பெற்றவள்!⁾

25 ⁽அவன் கேட்டதோ தண்ணீர்!␢ இவள் கொடுத்ததோ பால்!␢ அவள் உயர்தரக் கிண்ணத்தில்␢ தயிர் கொண்டு வந்தாள்.⁾

26 ⁽அவள் தன் கையைக் கூடார␢ முளையில் வைத்தாள்.␢ அவள் வலக்கை தொழிலாளர்␢ சுத்தியலைப் பிடித்தது.␢ சீசராவின் தலையில் அடித்தாள்;␢ சிதைத்தாள்; அவன் நெற்றிப்␢ பொட்டினை நொறுக்கினான்;␢ துளைத்தான்.⁾

27 ⁽அவன் சரிந்தான்; விழுந்தான்;␢ அவள் காலடியில் உயிரற்றுக்␢ கிடந்தான்; அவள் காலடியில் அவன்␢ சரிந்தான்; விழுந்தான்; அவன்␢ விழுந்த இடத்திலேயே␢ இறந்து கிடந்தான்.⁾

28 ⁽சீசராவின் தாய் சாளரம் வழியாக␢ எட்டிப்பார்த்தாள்.␢ சாளரத்தில் சாய்ந்துகொண்டு␢ அவள் கத்தினாள்;␢ “அவன் தேர் வர ஏன் இந்தத் தாமதம்?␢ அவன் தேர்க்குதிரைகளின் குளம்␢ பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை?⁾

29 ⁽அவளுடைய அறிவார்ந்த பணிப்␢ பெண்கள் அவளுக்கு விடை␢ கூறுகின்றனர்; அவளது கேள்விக்கு␢ அவளே விடை கூறுகின்றாள்;⁾

30 ⁽அவர்கள் கொள்ளைப் பொருளைக்␢ கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ?␢ ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்;␢ சீசராவுக்குக் கொள்ளைப்␢ பொருளில் வண்ண ஆடைகள்;␢ என் தோளுக்குக் கொள்ளையடித்த␢ வண்ண ஆடைகள்;␢ இரண்டு பூப்பின்னல் ஆடைகள்.⁾

31 ⁽“ஆண்டவரே, இவ்வாறு உம் எதிரிகள்␢ அழியட்டும்! உம்மீது அன்பு␢ கூர்வோர் பொலிவுடன், கதிரவன்␢ போல வாழட்டும்!”⁾பின்னர் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவிற்று.

நியாயாதிபதிகள் 5 ERV IRV TRV