1 ⁽இப்போது கூப்பிட்டுப்பாரும்!␢ யார் உமக்குப் பதிலுரைப்பார்?␢ எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?⁾

2 ⁽உண்மையில், அறிவிலியைத்தான்␢ எரிச்சல் கொல்லும்;␢ பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,⁾

3 ⁽அறிவிலி வேரூன்றுவதை␢ நானே கண்டேன்;␢ ஆனால் உடனே அவன் உறைவிடத்தில்␢ வெம்பழி விழுந்தது,⁾

4 ⁽அவனுடைய மக்களுக்குப்␢ பாதுகாப்பு இல்லை; ஊர்மன்றத்தில்␢ அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்;␢ மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.⁾

5 ⁽அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்;␢ முள்ளுக்கு நடுவிலுள்ளதையும்␢ அவர்கள் பறிப்பர்; பேராசைக்காரர்␢ அவன் சொத்துக்காகத் துடிப்பர்.⁾

6 ⁽ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது;␢ மண்ணினின்று இன்னல் விளையாது.⁾

7 ⁽நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல,␢ துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.⁾

8 ⁽ஆனால், நான் கடவுளையே நாடுவேன்;␢ அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.⁾

9 ⁽ஆராய முடியாப் பெரியனவற்றையும்␢ எண்ணிலடங்கா வியக்கத்␢ தக்கனவற்றையும் செய்பவர் அவரே.⁾

10 ⁽மண் முகத்தே மழையைப் பொழிபவரும்␢ வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.⁾

11 ⁽அவர் தாழ்ந்தோரை␢ மேலிடத்தில் அமர்த்துகின்றார்;␢ அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.⁾

12 ⁽வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்;␢ அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.⁾

13 ⁽ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில்␢ சிக்க வைக்கின்றார்;␢ வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன;⁾

14 ⁽அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்;␢ நண்பகலிலும் இரவில்போல்␢ தடுமாறுகின்றனர்.⁾

15 ⁽அவர் வறியவரை அவர்களின்␢ வாயெனும் வாளினின்று காக்கின்றார்;␢ எளியவரை வலியவரின்␢ கையினின்று மீட்கின்றார்.⁾

16 ⁽எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு;␢ அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.⁾

17 ⁽இதோ! கடவுள் திருத்தும் மனிதர்␢ பேறு பெற்றோர்; ஆகவே,␢ வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.⁾

18 ⁽காயப்படுத்தினாலும்␢ கட்டுப்போடுபவர் அவரே;␢ அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.⁾

19 ⁽ஆறு வகை அல்லல்களினின்றும்␢ அவர் உம்மை மீட்பார்;␢ ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.⁾

20 ⁽பஞ்சத்தில் சாவினின்றும்␢ சண்டையில் வாள் முனையினின்றும்␢ உம்மை விடுவிப்பார்.⁾

21 ⁽நாவின் சொல்லடியினின்றும்␢ நீர் மறைக்கப்படுவீர்;␢ நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.⁾

22 ⁽அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்;␢ மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.⁾

23 ⁽வயல்வெளிக் கற்களோடு␢ உம் உடன்படிக்கை இருக்கும்;␢ காட்டு விலங்குகளோடும்␢ நீர் அமைதியில் வாழ்வீர்.⁾

24 ⁽உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்;␢ உம் மந்தையைச் சென்று காண்கையில்␢ ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.⁾

25 ⁽உமது வித்து பெருகுவதையும்,␢ உமது வழிமரபினர் நிலத்துப்␢ புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.⁾

26 ⁽பழுத்த வயதில் தளர்வின்றிக்␢ கல்லறை செல்வீர்,␢ பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.⁾

27 ⁽இதுவே யாம் கண்டறிந்த உண்மை!␢ செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுண‌ர்வீர்.⁾

யோபு 5 ERV IRV TRV