1 எலிகூ தொடர்ந்து பேசலானான்:

2 ⁽சற்றுப் பொறும்;␢ காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய்␢ நான் கூற வேண்டியவற்றை.⁾

3 ⁽தொலையிலிருந்து␢ என் அறிவைக் கொணர்வேன்;␢ எனை உண்டாக்கியவர்க்கு␢ நேர்மையை உரித்தாக்குவேன்.⁾

4 ⁽ஏனெனில், மெய்யாகவே␢ பொய்யன்று என் சொற்கள்;␢ அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.⁾

5 ⁽இதோ! இறைவன் வல்லவர்;␢ எவரையும் புறக்கணியார்;␢ அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.⁾

6 ⁽கொடியவரை அவர் வாழவிடார்;␢ ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;⁾

7 ⁽நேர்மையாளர்மீது கொண்ட␢ பார்வையை அகற்றார்;␢ அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்;␢ என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.⁾

8 ⁽ஆனால் அவர்கள்␢ சங்கிலியால் கட்டுண்டாரெனில்,␢ வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,⁾

9 ⁽அவர்கள் செய்ததையும் மீறியதையும்,␢ இறுமாப்புடன் நடந்ததையும்␢ எடுத்து இயம்புவார்.⁾

10 ⁽அறிவுரைகளுக்கு␢ அவர்கள் செவியைத் திறப்பார்;␢ தீச்செயலிலிருந்து திரும்புமாறு␢ ஆணையிடுவார்.⁾

11 ⁽அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால்,␢ வளமாய்த் தங்கள் நாள்களையும்␢ இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.⁾

12 ⁽செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர்.␢ அறிவின்றி அவர்கள் அழிந்துபோவர்.⁾

13 ⁽தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்;␢ அவர்களை அவர் கட்டிப்போடுகையில்␢ உதவிக்காகக் கதறமாட்டார்.⁾

14 ⁽அவர்கள் இளமையில் மடிவர்;␢ காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.⁾

15 ⁽துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்;␢ வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.⁾

16 ⁽இடுக்கண் வாயினின்று␢ உங்களை இழுத்துக் காத்தார்;␢ ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார்.␢ உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.⁾

17 ⁽பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது;␢ தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.⁾

18 ⁽வளமையால் வழிபிறழாமல்␢ பார்த்துக்கொள்ளும்;␢ நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.⁾

19 ⁽உம் நிறைந்த செல்வமும்␢ வல்லமையின் முழு ஆற்றலும்␢ இன்னலில் உமக்கு உதவுமா?⁾

20 ⁽இருந்த இடத்திலேயே மக்கள் மடியும்␢ இரவுக்காக ஏங்காதீர்.⁾

21 ⁽துன்பத்தைவிட தீச்செயலையே␢ நீர் தேர்ந்துகொண்டீர்; எனவே␢ அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.⁾

22 ⁽இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்;␢ அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?⁾

23 ⁽அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்?␢ அவர்க்கு ‘நீர் வழிதவறினிர்” எனச்␢ சொல்ல வல்லவர் யார்?⁾

24 ⁽அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும்.␢ மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.⁾

25 ⁽மனித இனம் முழுவதும் அதைக் கண்டது;␢ மனிதன் தொலையிலிருந்தே␢ அதை நோக்குவான்.⁾

26 ⁽இதோ! இறைவன் பெருமை மிக்கவர்;␢ நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்;␢ அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை;␢ கணக்கிட முடியாதவை.⁾

27 ⁽நீர்த்துளிகளை அவர்␢ ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை␢ மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.⁾

28 ⁽முகில்கள் அவற்றைப் பொழிகின்றன;␢ மாந்தர்மேல் அவற்றை␢ மிகுதியாகப் பெய்கின்றன.⁾

29 ⁽பரவும் முகில்களையும்␢ அவர்தம் மணிப்பந்தலின்␢ ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?⁾

30 ⁽இதோ! தம்மைச் சுற்றி␢ மின்னல் ஒளிரச் செய்கின்றார்.␢ கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.⁾

31 ⁽இவற்றால், மக்களினங்கள்மீது␢ தீர்ப்பளிக்கின்றார்;␢ அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.⁾

32 ⁽மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்;␢ இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.⁾

33 ⁽இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்;␢ புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.⁾