1 ⁽பின் யோபு உரைத்த மறுமொழி:⁾

2 ⁽என் உள்ளத்தை எவ்வளவு காலத்திற்குப் புண்படுத்துவீர்?␢ என்னை வார்த்தையால் நொறுக்குவீர்?⁾

3 ⁽பன்முறை என்னைப் பழித்துரைத்தீர்;␢ வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசினீர்.⁾

4 ⁽உண்மையாகவே␢ நான் பிழை செய்திருந்தாலும்␢ என்னுடன் அன்றோ அந்தப் பிழை இருக்கும்?⁾

5 ⁽எனக்கு எதிராய் நீங்களே உங்களைப்␢ பெருமைப்படுத்திக் கொள்வீர்களாகில்,␢ என் இழிநிலையை␢ எனக்கு விரோதமாய்க் காட்டுவீராகில்,⁾

6 ⁽கடவுள்தான் என்னை␢ நெருக்கடிக்குள் செலுத்தினார் என்றும்,␢ வலைவீசி என்னை வளைத்தார் என்றும்␢ அறிந்துகொள்க!⁾

7 ⁽இதோ! ‘கொடுமை’ எனக்␢ கூக்குரலிட்டாலும் கேட்பாரில்லை;␢ நான் ஓலமிட்டாலும் தீர்ப்பாரில்லை.⁾

8 ⁽நான் கடந்துபோகாவண்ணம்,␢ கடவுள் என் வழியை அடைத்தார்;␢ என் பாதையை இருளாக்கினார்.⁾

9 ⁽என் மாண்பினை அவர் களைந்தார்;␢ மணிமுடியை என் தலையினின்று அகற்றினார்.⁾

10 ⁽எல்லாப் பக்கமும் என்னை␢ இடித்துக் தகர்த்தார்;␢ நான் தொலைந்தேன்;␢ மரம்போலும் என் நம்பிக்கையை␢ வேரோடு பிடுங்கினார்.⁾

11 ⁽அவர்தம் கோபக்கனல் எனக்கெதிராய்த்␢ தெறித்தது; அவர் எதிரிகளில் ஒருவனாய்␢ என்னையும் எண்ணுகின்றார்.⁾

12 ⁽அவர்தம் படைகள் ஒன்றாக எழுந்தன;␢ அவர்கள் எனக்கெதிராய் முற்றுகை இட்டனர்;␢ என் கூடாரத்தைச் சுற்றிப்␢ பாசறை அமைத்தனர்.⁾

13 ⁽என் உடன் பிறந்தவரை␢ என்னிடமிருந்து அகற்றினார்;␢ எனக்கு அறிமுகமானவரை␢ முற்றிலும் விலக்கினார்;⁾

14 ⁽என் உற்றார் என்னை ஒதுக்கினர்;␢ என் நண்பர்கள் என்னை மறந்தனர்.⁾

15 ⁽என் வீட்டு விருந்தினரும்␢ என் பணிப்பெண்களும்␢ என்னை அன்னியனாகக் கருதினர்;␢ அவர்கள் கண்களுக்குமுன்␢ நான் அயலானானேன்.⁾

16 ⁽என் அடிமையை அழைப்பேன்;␢ மறுமொழி கொடான்; என் வாயால்␢ அவனைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.⁾

17 ⁽என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று;␢ என் தாயின் பிள்ளைகளுக்கு␢ நாற்றம் ஆனேன்.⁾

18 ⁽குழந்தைகளும் என்னைக்␢ கேலி செய்கின்றனர்;␢ நான் எழுந்தால் கூட ஏளனம் செய்கின்றனர்.⁾

19 ⁽என் உயிர் நண்பர் எல்லாரும்␢ என்னை வெறுத்தனர்;␢ என் அன்புக்குரியவராய் இருந்தோரும்␢ எனக்கெதிராக மாறினர்.⁾

20 ⁽நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்;␢ நான் பற்களின் ஈறோடு தப்பினேன்.⁾

21 ⁽என் மேல் இரங்குங்கள்;␢ என் நண்பர்காள்! என் மேல்␢ இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில்␢ கடவுளின் கை என்னைத் தண்டித்தது.⁾

22 ⁽இறைவனைப் போல்␢ நீங்களும் என்னை விரட்டுவது ஏன்?␢ என் சதையை நீங்கள் குதறியது போதாதா?⁾

23 ⁽ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது␢ வரையப்படலாகாதா? ஓ! அவை␢ ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா?⁾

24 ⁽இரும்புக்கருவியாலும் ஈயத்தாலும்␢ என்றென்றும் அவை␢ பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.⁾

25 ⁽ஏனெனில், என் மீட்பர்␢ வாழ்கின்றார் என்றும்␢ இறுதியில் மண்மேல் எழுவார் என்றும்␢ நான் அறிவேன்.⁾

26 ⁽என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின்,␢ நான் சதையோடு இருக்கும் போதே␢ கடவுளைக் காண்பேன்.⁾

27 ⁽நானே, அவர் என் பக்கத்தில்␢ நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்;␢ வேறு கண்கள் அல்ல;␢ என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.⁾

28 ⁽ஆனால், நீங்கள் பேசிக்கொள்கின்றீர்கள்;␢ ‘அவனை எப்படி நாம் வதைப்பது?␢ அவனிடம் அடிப்படைக் காரணத்தை␢ எவ்வாறு கண்டுபிடிப்பது?’⁾

29 ⁽மாறாக — வாளுக்கு நீங்களே␢ அஞ்சவேண்டும்; ஏனெனில்,␢ சீற்றம் வாளின் தண்டனையைக் கொணரும்;␢ அப்போது, நீதித் தீர்ப்பு உண்டு என்பதை␢ அறிந்துகொள்வீர்கள்.⁾

யோபு 19 ERV IRV TRV