1 ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது:

2 “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.

3 ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று அழைத்து வருவேன்; அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.”⒫

4 இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:

5 ⁽ஆண்டவர் கூறுகின்றார்;␢ திடுக்கிடச் செய்யும் ஒலியை␢ நான் கேட்கின்றேன்;␢ அது அச்சத்தின் ஒலி;␢ சமாதானத்தின் ஒலி அன்று.⁾

6 ⁽‘ஆண்மகன் எவனாவது␢ பிள்ளை பெற்றதுண்டா?’ என்று␢ கேட்டுப் பாருங்கள்.␢ அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும்␢ பேறுகாலப் பெண்ணைப்போலத்␢ தன் இடுப்பில் கையை␢ வைத்துக் கொண்டிருப்பதை␢ நான் ஏன் காண்கிறேன்?␢ எல்லா முகங்களும் மாறிவிட்டன;␢ அவை வெளிறிப்போய்விட்டன!⁾

7 ⁽அந்தோ! அந்த நாள் பெரிய நாள்;␢ மற்றெந்த நாளும்␢ அதைப் போன்றில்லை.␢ யாக்கோபுக்கு அது␢ வேதனையின் காலம்;␢ ஆனால் அதனின்று␢ அவன் விடுவிக்கப்பெறுவான்.⁾

8 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும் அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்; அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன்.

9 அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்!

10 ⁽என் ஊழியன் யாக்கோபே,␢ அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே,␢ என்கிறார் ஆண்டவர்.␢ தொலை நாட்டினின்று␢ உன்னை நான் மீட்பேன்;␢ அடிமைத்தன நாட்டினின்று␢ உன் வழிமரபினரை விடுவிப்பேன்.␢ யாக்கோபு திரும்பிவந்து␢ அமைதியில் இளைப்பாறுவான்;␢ அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.⁾

11 ⁽நான் உன்னோடு இருக்கின்றேன்;␢ உன்னை மீட்பதற்காக உள்ளேன்,␢ என்கிறார் ஆண்டவர்.␢ எந்த மக்களினத்தார் இடையே␢ நான் உன்னைச் சிதறடித்தேனோ␢ அவர்கள் அனைவரையும்␢ முற்றிலும் அழித்தொழிப்பேன்;␢ உன்னையோ முற்றிலும்␢ அழிக்கமாட்டேன்;␢ உன்னை நீதியான முறையில்␢ தண்டிப்பேன்;␢ உன்னைத் தண்டிக்காமல்␢ விட்டுவிடமாட்டேன்;␢ உன்னை எவ்வகையிலேனும்␢ தண்டியாதுவிடேன்.⁾

12 ⁽ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;␢ உனது காயத்தைக்␢ குணப்படுத்த முடியாது;␢ உனது புண் புரையோடிப்போனது.⁾

13 ⁽உனக்காக வாதிட எவனும் இல்லை;␢ உனது காயத்தை ஆற்ற␢ மருந்தே இல்லை;␢ உன்னைக் குணப்படுத்தவே முடியாது.⁾

14 ⁽உன் காதலர் அனைவரும்␢ உன்னை மறந்துவிட்டனர்;␢ உன்னை அவர்கள் தேடுவதே இல்லை;␢ மாற்றான் தாக்குவது போல␢ நான் உன்னைத் தாக்கினேன்;␢ கொடியோன் தண்டிப்பதுபோல␢ நான் உன்னைத் தண்டித்தேன்;␢ ஏனெனில் உனது குற்றம் பெரிது;␢ உன் பாவங்களோ எண்ணற்றவை.⁾

15 ⁽நீ நொறுக்கப்பட்டதை எண்ணி␢ ஏன் அழுகின்றாய்?␢ உனது வேதனையைத் தணிக்கமுடியாது;␢ ஏனெனில் உனது குற்றமோ பெரிது;␢ உன் பாவங்களோ எண்ணற்றவை;␢ எனவே இவற்றை எல்லாம்␢ நான் உனக்குச் செய்தேன்.⁾

16 ⁽ஆயினும், உன்னை விழுங்குவோர்␢ எல்லாரும் விழுங்கப்படுவர்;␢ உன் பகைவர் எல்லாரும்␢ ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்;␢ உன்னைக் கொள்ளையடிப்போர்␢ அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்;␢ உன்னைச் சூறையாடுவோர்␢ அனைவரும், நான் கையளிக்க,␢ சூறையாடப்படுவர்.⁾

17 ⁽நான் உனக்கு நலம் அளிப்பேன்;␢ உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்,␢ என்கிறார் ஆண்டவர்.␢ ஏனெனில், “தள்ளப்பட்டவள்” என்று␢ உன்னை அழைத்தார்கள்;␢ ‘இந்தச் சீயோனைப் பற்றிக்␢ கவலைப்படுவார் யாருமிலர்’,␢ என்றார்கள்.⁾

18 ⁽ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;␢ அடிமைத் தனத்தினின்று␢ நான் யாக்கோபின் கூடாரங்களை␢ திரும்பக் கொணர்வேன்;␢ அவனுடைய உறைவிடங்கள்மீது␢ நான் இரக்கம் காட்டுவேன்;␢ அவற்றின் இடிபாடுகள்மேலேயே␢ நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்;␢ அரண்மனையும் அதற்குரிய␢ இடத்திலேயே அமைக்கப்படும்.⁾

19 ⁽அவர்களிடமிருந்து␢ நன்றிப் பாக்கள் எழும்பிவரும்;␢ மகிழ்ச்சியுறுவோரின்␢ ஆரவாரம் கேட்கும்.␢ அவர்களை நான்␢ பல்கிப் பெருகச் செய்வேன்;␢ அவர்கள் எண்ணிக்கையில்␢ குறைய மாட்டார்கள்.␢ நான் அவர்களைப்␢ பெருமைப் படுத்துவேன்;␢ இனி அவர்கள்␢ சிறுமையுற மாட்டார்கள்.⁾

20 ⁽அவர்களுடைய பிள்ளைகள்␢ முன்புபோல் இருப்பர்;␢ அவர்களது கூட்டமைப்பு␢ என் திருமுன் நிலை நாட்டப்படும்;␢ அவர்களை ஒடுக்குவோர்␢ அனைவரையும் தண்டிப்பேன்.⁾

21 ⁽அவர்களின் தலைவன்␢ அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்;␢ அவர்களை ஆள்பவன்␢ அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்;␢ அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்;␢ அவனும் என்னை அணுகிவருவான்;␢ ஏனெனில், என்னை அணுகிவர␢ வேறு யாருக்குத் துணிவு உண்டு?,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

22 ⁽நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்;␢ நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.⁾

23 ⁽இதோ ஆண்டவரின் புயல்!␢ அவரது சினம்␢ சூறாவளிபோல் சுழன்றெழும்.␢ அது தீயோரின் தலையைத் தாக்கிச்␢ சுழன்றடிக்கும்.⁾

24 ⁽ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள␢ திட்டங்கள் அனைத்தையும்␢ செயல்படுத்தி நிறைவேற்றாமல்␢ அவரது வெஞ்சினம் திரும்பிவராது;␢ வரவிருக்கும் நாள்களில்␢ அதை நீங்கள் உணர்வீர்கள்.⁾

எரேமியா 30 ERV IRV TRV