1 ⁽முன்பு என்னிடம் எதுவும்␢ கேளாதவர்கள்␢ என்னைத் தேடி அடைய இடமளித்தேன்;␢ என்னை நாடாதவர்கள்␢ என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்;␢ என் பெயரை வழிபடாத␢ மக்களினத்தை நோக்கி,␢ “இதோ நான், இதோ நான்” என்றேன்.⁾

2 ⁽தங்கள் எண்ணங்களின்படி நடந்து␢ பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும்␢ கலகக்கார மக்களினத்தின்␢ மீது நாள் முழுவதும்␢ என் கைகளை விரித்து நீட்டினேன்.⁾

3 ⁽அந்த மக்களினத்தார் என் கண் எதிரே␢ இவற்றைச் செய்து இடையறாது␢ எனக்குச் சினமூட்டுகின்றனர்;␢ தோட்டங்களில் பலியிட்டு,␢ செங்கற்கள்மேல் தூபம் காட்டுகின்றனர்.⁾

4 ⁽கல்லறைகளிடையே அமர்ந்து␢ மறைவிடங்களில்␢ இரவைக் கழிக்கின்றனர்;␢ பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்;␢ தீட்டான கறிக்குழம்பைத்␢ தம் கலங்களில் வைத்துள்ளனர்.⁾

5 ⁽இவ்வாறிருந்தும், “எட்டி நில்,␢ என் அருகில் வராதே,␢ நான் உன்னைவிடத்␢ தூய்மையானவன்” என்கின்றனர்.␢ என் சினத்தால்␢ மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும்␢ நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும்␢ இவர்கள் இருக்கின்றனர்.⁾

6 ⁽அவர்களுக்குரியது என்முன்␢ எழுதப்பட்டாயிற்று;␢ நான் அமைதியாய் இருப்பதில்லை;␢ அவர்களுக்குத் தகுந்த கைம்மாறை␢ அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.⁾

7 ⁽அவர்கள் தீச்செயலுக்கும்␢ அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும்␢ சேர்த்துக் கொட்டுவேன்,␢ என்கிறார் ஆண்டவர்.␢ ஏனெனில் அவர்கள்␢ மலைமேல் தூபம் காட்டினார்கள்;␢ குன்றுகளின்மேல்␢ என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்;␢ அவர்களுடைய முன்னைய␢ செயல்களுக்குரிய கைம்மாறை␢ அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.⁾

8 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ திராட்சைக்குலையில்␢ புது இரசம் கிடைக்கும்போது,␢ ‘அதை அழிக்காதே,␢ அதில் ஆசி உள்ளது’ என்பார்கள்.␢ அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும்␢ நான் செயலாற்றுவேன்;␢ அவர்கள் அனைவரையும்␢ அழிந்துவிட மாட்டேன்.⁾

9 ⁽யாக்கோபினின்று வழிமரபினரையும்,␢ யூதாவினின்று என் மலைகளை␢ உடைமையாக்குவோரையும்␢ தோன்றச் செய்வேன்.␢ நான் தேர்ந்துகொண்டோர்␢ நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்;␢ என் ஊழியர் அங்கே வாழ்வர்.⁾

10 ⁽என்னை வழிபடும் என் மக்களுக்குச்␢ சாரோன் சமவெளி␢ ஆடுகளுக்கு மேய்நிலமாகவும்␢ ஆக்கோர் பள்ளத்தாக்கு␢ மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும்.⁾

11 ⁽ஆண்டவராகிய என்னைக் கைவிட்டு விட்டு,␢ என் திருமலையை மறந்தவர்களே!␢ கத்து* தெய்வத்திற்கு விருந்து படைத்து,␢ மெனீ** தெய்வத்திற்கு␢ நறுமணத்திராட்சை இரசத்தைக்␢ கிண்ணங்களில் வார்ப்பவர்களே!⁾

12 ⁽உங்களை வாளுக்கு␢ இரையெனக் குறிப்பேன்;␢ நீங்கள் அனைவரும்␢ கொலைக்குத் தலைதாழ்த்துவீர்கள்;␢ ஏனெனில், நான் அழைப்பு விடுத்தேன்;␢ நீங்கள் மறுமொழி தரவில்லை;␢ நான் பேசினேன்,␢ நீங்கள் கவனிக்கவில்லை;␢ என் பார்வைக்குத்␢ தீமையெனப்பட்டதைச் செய்தீர்கள்;␢ எனக்கு விருப்பமில்லாததைத்␢ தேர்ந்து கொண்டீர்கள்.⁾

13 ⁽ஆதலால் என் தலைவராகிய␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ என் ஊழியர்கள் உண்பார்கள்;␢ நீங்களோ பசியால் வாடுவீர்கள்.␢ என் வேலையாள்கள் பானம் பருகுவார்கள்;␢ நீங்களோ தாகத்தால் தவிப்பீர்கள்;␢ என் அடியார்கள் அக்களிப்பார்கள்;␢ நீங்களோ அவமதிக்கப்படுவீர்கள்.⁾

14 ⁽என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து␢ ஆர்ப்பரிப்பார்கள்;␢ நீங்களோ நெஞ்சம் உடைந்து␢ கூக்குரலிடுவீர்கள்;␢ ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள்.⁾

15 ⁽நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு␢ உங்கள் பெயரைச்␢ சாபப் பெயராய் விட்டுச் செல்வீர்கள்;␢ என் தலைவராகிய ஆண்டவர்␢ உங்களைக் கொன்றொழிப்பார்;␢ தம் ஊழியருக்கோ புதுப்பெயர் சூட்டுவார்.⁾

16 ⁽மண்ணுலகில் ஆசி பெற விழைபவன்␢ உண்மைக் கடவுளின் பெயரால்␢ ஆசிபெறுவான்;␢ பூவுலகில் ஆணையிடுபவன்␢ மெய்க் கடவுளின் பெயரால்␢ ஆணையிடுவான்;␢ ஏனெனில், முந்நாளைய துன்பங்கள்␢ மறந்து போயின;␢ அவை என் பார்வையிலிருந்து␢ மறைந்து போயின.⁾

17 ⁽இதோ! புதிய விண்ணுலகையும்␢ புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்;␢ முந்தியவை␢ நினைத்துப் பார்க்கப்படுவதில்லை;␢ மனத்தில் எழுதுவதுமில்லை.⁾

18 ⁽நான் படைப்பனவற்றில் நீங்கள்␢ என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள்.␢ இதோ நான் எருசலேமை␢ மகிழ்ச்சிக்குரியதாகவும்␢ அதன் மக்களைப்␢ பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.⁾

19 ⁽நானும் எருசலேமை முன்னிட்டு␢ மகிழ்ச்சியடைவேன்;␢ என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்;␢ இனி அங்கே அழுகையும் கூக்குரலும்␢ ஒருபோதும் கேட்கப்படா.⁾

20 ⁽இனி அங்கே␢ சில நாள்களுக்குள் இறக்கும்␢ பச்சிளங்குழந்தையே இராது;␢ தம் வாழ்நாளை நிறைவு செய்யாத␢ முதியவர் இரார்;␢ ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும்␢ இளைஞனாகக் கருதப்படுவான்.␢ பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும்␢ சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.⁾

21 ⁽அவர்கள் வீடு கட்டி␢ அங்குக் குடியிருப்பார்கள்;␢ திராட்சை நட்டு␢ அதன் கனிகளை உண்பார்கள்.⁾

22 ⁽வேறொருவர் குடியிருக்க␢ அவர்கள் கட்டுவதில்லை;␢ மற்றொருவர் உண்ண␢ அவர்கள் நடுவதில்லை;␢ மரங்களின் வாழ்நாள் போன்றே␢ என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்;␢ நான் தேர்ந்து கொண்டவர்கள்␢ தங்கள் உழைப்பின் பயனை␢ நெடுநாள் துய்ப்பார்கள்.⁾

23 ⁽வீணாக அவர்கள் உழைப்பதில்லை;␢ தங்கள் பிள்ளைகளை␢ அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை;␢ ஏனெனில், அவர்கள்␢ ஆண்டவரது ஆசியைப் பெற்றோரின்␢ வழிமரபினர்!␢ அவர்களின் தலைமுறையினர்␢ அவர்களுடன் இருப்பார்கள்.⁾

24 ⁽அவர்கள் வேண்டுவதற்கு முன்னே␢ நான் மறுமொழி தருவேன்;␢ அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே␢ பதிலளிப்பேன்.⁾

25 ⁽ஓநாயும் ஆட்டுக்குட்டியும்␢ ஒருமித்து மேயும்;␢ சிங்கம் மாட்டைப்போல்␢ வைக்கோல் தின்னும்;␢ பாம்பு புழுதியைத் தின்னும்;␢ என் திருமலை முழுவதிலும்␢ தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும்␢ எவருமில்லை, என்கிறார் ஆண்டவர்.⁾

ஏசாயா 65 ERV IRV TRV