1 ⁽நீர் வானங்களைப் பிளந்து␢ இறங்கி வரமாட்டீரா?␢ மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே!⁾

2 ⁽விறகின்மேல் தீ␢ கொழுந்துவிட்டு எரிவது போலும்,␢ தண்ணீரை நெருப்பு␢ கொதிக்கச் செய்வது போலும்,␢ அவற்றின் நிலைமை இருக்கும்.␢ இவற்றால் உம் பெயர்␢ உம் பகைவருக்குத் தெரியவரும்;␢ வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.⁾

3 ⁽நாங்கள் எதிர்பாராத␢ அச்சம் தரும் செயல்களை␢ நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்;␢ மலைகள் உம் முன்னே உருகி ஓடின!⁾

4 ⁽தம்மை நம்பியிருப்போருக்காகச்␢ செயலாற்றும் கடவுள்␢ உம்மையன்றி வேறு யார்?␢ முற்காலம் முதல் இதுபற்றி␢ எவரும் கேள்வியுற்றதில்லை;␢ செவியுற்றதுமில்லை,␢ கண்ணால் பார்த்ததுமில்லை.⁾

5 ⁽மகிழ்ச்சியுடன்␢ நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும்␢ உம்மையும் உம் வழிகளையும்␢ நினைவில் கொள்வோர்க்கும்␢ நீர் துணை செய்ய விரைகிறீர்;␢ இதோ, நீர் சினமடைந்தீர்;␢ நாங்கள் பாவம் செய்தோம்;␢ நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க,␢ நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?⁾

6 ⁽நாங்கள் அனைவரும்␢ தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்;␢ எங்கள் நேரிய செயல்கள் எல்லாம்␢ அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின;␢ நாங்கள் யாவரும் இலைபோல்␢ கருகிப் போகின்றோம்;␢ எங்கள் தீச்செயல்கள்␢ காற்றைப் போல்␢ எங்களை அடித்துச் சென்றன.⁾

7 ⁽உம் பெயரைப் போற்றுவார்␢ எவரும் இல்லை;␢ உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர்␢ எவரும் இல்லை;␢ நீர் உம் முகத்தை␢ எங்களுக்கு மறைத்துள்ளீர்;␢ எங்கள் தீச்செயல்களின் பிடியில்␢ எங்களை அழியவிட்டீர்.⁾

8 ⁽ஆயினும், ஆண்டவரே␢ நீரே எங்கள் தந்தை;␢ நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்;␢ நாங்கள் அனைவரும்␢ உம் கைவேலைப்பாடுகளே.⁾

9 ⁽ஆண்டவரே, கடுஞ்சினம் கொள்ளாதிரும்;␢ குற்றத்தை என்றென்றும் நினையாதிரும்;␢ உம் மக்களாகிய எங்கள் அனைவரையும்␢ கண்ணோக்கும்.⁾

10 ⁽உம் புனித நகர்கள் பாலை நிலமாயின;␢ சீயோன் பாழ் நிலமாயிற்று;␢ எருசலேம் பாழடைந்து கிடக்கின்றது.⁾

11 ⁽எம் மூதாதையர் உம்மைப் போற்றிப் பாடிய␢ தூய்மையும் மாட்சியும் மிக்க␢ எங்கள் திருக்கோவில்␢ நெருப்புக்கு இரையாயிற்று;␢ எங்களுக்கு அருமையானவை␢ அனைத்தும் அழிந்து போயின.⁾

12 ⁽ஆண்டவரே, இவற்றைக் கண்டும்␢ நீர் வாளாவிருப்பீரோ?␢ மவுனமாயிருந்து␢ எங்களைக் கடுமையாய் வருத்துவீரோ?⁾

ஏசாயா 64 ERV IRV TRV