1 ⁽ஏதோமிலிருந்து வருகின்ற␢ இவர் யார்?␢ கருஞ்சிவப்பு உடை உடுத்திப்␢ பொட்சராவிலிருந்து வரும் இவர் யார்?␢ அழகுமிகு ஆடை அணிந்து␢ பேராற்றலுடன் பீடுநடைபோடும்␢ இவர் யார்?␢ நானேதான் அவர்!␢ வெற்றியை பறைசாற்றுபவர்;␢ விடுதலை வழங்குவதில் திறன்மிக்கவர்.⁾

2 ⁽உம் ஆடை சிவப்பாய் இருப்பதேன்?␢ உம் உடைகள்␢ திராட்சை பிழியும் ஆலையில்␢ மிதிப்பவன் உடைபோல் இருப்பதேன்?⁾

3 ⁽தனியாளாய் நான் திராட்சை பிழியும்␢ ஆலையில் மிதித்தேன்;␢ மக்களினத்தவருள் எவனும்␢ என்னுடன் இருக்கவில்லை;␢ என் கோபத்தில் நான்␢ அவர்களை மிதித்தேன்;␢ என் சினத்தில் அவர்களை நசுக்கினேன்;␢ அவர்கள் செந்நீர்␢ என் உடைகள் மேல் தெறித்தது;␢ என் ஆடைகள் அனைத்தையும்␢ கறையாக்கினேன்.⁾

4 ⁽நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாள்␢ என் நெஞ்சத்தில் இருந்தது;␢ மீட்பின் ஆண்டு வந்துவிட்டது.⁾

5 ⁽சுற்றுமுற்றும் பார்த்தேன்;␢ துணைபுரிவோர் எவருமில்லை;␢ திகைப்புற்று நின்றேன்;␢ தாங்குவார் யாருமில்லை;␢ என் புயமே␢ எனக்கு வெற்றி கொணர்ந்தது;␢ என் சினமே எனக்கு ஊக்கமளித்தது.⁾

6 ⁽சினமுற்று, மக்களினங்களை மிதித்தேன்;␢ சீற்றமடைந்து அவர்களைக்␢ குடிவெறி கொள்ளச்செய்தேன்;␢ அவர்கள் குருதியைத்␢ தரையில் கொட்டினேன்.⁾

7 ⁽ஆண்டவரின் பேரன்புச் செயல்களை␢ எடுத்துரைத்து␢ அவருக்குப் புகழ்சாற்றுவேன்;␢ ஏனெனில், ஆண்டவர் நமக்கு␢ நன்மைகள் செய்துள்ளார்;␢ தம் இரக்கத்தையும்␢ பேரன்பையும் முன்னிட்டு␢ இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு␢ மாபெரும் நன்மை செய்துள்ளார்.⁾

8 ⁽ஏனெனில், “மெய்யாகவே␢ அவர்கள் என் மக்கள்,␢ வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்று␢ அவர் கூறியுள்ளார்; மேலும்␢ அவர் அவர்களின் மீட்பர் ஆனார்.⁾

9 ⁽துன்பங்கள் அனைத்திலும்␢ அவர்களின் மீட்பர் ஆனார்;␢ தூதரோ வானதூதரோ அல்ல,␢ அவரே நேரடியாக␢ அவர்களை விடுவித்தார்;␢ தம் அன்பினாலும் இரக்கத்தினாலும்␢ அவர்களை மீட்டார்;␢ பண்டைய நாள்கள் அனைத்திலும்␢ அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.⁾

10 ⁽அவர்களோ, அவருக்கு எதிராக எழும்பி,␢ அவரது தூய ஆவியைத்␢ துயருறச் செய்தனர்;␢ ஆதலால் அவரும்␢ அவர்களின் பகைவராய் மாறினார்;␢ அவர்களை எதிர்த்து அவரே போரிட்டார்.⁾

11 ⁽அப்பொழுது அவர் மக்கள்␢ மோசேயின் காலமாகிய␢ பண்டைய நாள்களை நினைவு கூர்ந்தனர்;␢ தம் மந்தையை மேய்ப்பரோடு␢ கடலினின்று கரையேற்றியவர் எங்கே?␢ அவருக்குத் தம் தூய ஆவியை␢ அருளியவர் எங்கே?⁾

12 ⁽தம் மாட்சிமிகு புயத்தால்␢ மோசேயின் வலக்கையை␢ நடத்தி சென்றவர் எங்கே?␢ தம் பெயர் என்றென்றும் நிலைக்குமாறு␢ அவர்கள் முன்␢ தண்ணீரைப் பிரித்தவர் எங்கே?⁾

13 ⁽ஆழ்கடலின் நடுவே␢ அவர்களை நடத்திச் சென்றவர் யார்?␢ பாலை நிலத்தில் தளராத குதிரைபோல்␢ அவர்கள் தடுமாறவில்லை.⁾

14 ⁽கால்நடை பள்ளத்தாக்கினுள்␢ இறங்கிச் செல்வதுபோல்␢ அவர்களும் இளைப்பாற␢ ஆண்டவரின் ஆவி அவர்களை நடத்தியது.␢ இவ்வாறு, உமது பெயர் சிறப்புறுமாறு␢ நீர் உம் மக்களை நடத்திவந்தீர்.⁾

15 ⁽விண்ணகத்தினின்று கண்ணோக்கும்;␢ தூய்மையும் மாட்சியும் உடைய உம்␢ உறைவிடத்தினின்று பார்த்தருளும்;␢ உம் ஆர்வமும் ஆற்றலும் எங்கே?␢ என்மீது நீர் கொண்ட நெஞ்சுருக்கும்␢ அன்பும் இரக்கப்பெருக்கும் எங்கே?␢ என்னிடமிருந்து அவற்றை␢ நிறுத்தி வைத்துள்ளீரே!⁾

16 ⁽ஏனெனில், நீரே எங்கள் தந்தை;␢ ஆபிரகாம் எங்களை அறியார்;␢ இஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்;␢ ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை;␢ பண்டை நாளிலிருந்து␢ ‘எம் மீட்பர்’ என்பதே உம் பெயராம்.⁾

17 ⁽ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து␢ எங்களைப் பிறழச் செய்வதேன்?␢ உமக்கு அஞ்சி நடவாதவாறு␢ எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்?␢ உம் ஊழியர்களை முன்னிட்டும்,␢ உம் உரிமைச் சொத்தாகிய,␢ குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும்.⁾

18 ⁽உம் திருத்தலத்தை உம் புனித மக்கள்␢ சிறிது காலம்␢ உடைமையாகக் கொண்டிருந்தனர்;␢ எங்கள் பகைவர்␢ அதைத் தரைமட்டமாக்கினர்.⁾

19 ⁽உம்மால் என்றுமே␢ ஆளப்படாதவர்கள் போலானோம்;␢ உம் பெயரால்␢ அழைக்கப்படாதவர்கள் போலானோம்.⁾

ஏசாயா 63 ERV IRV TRV