1 என் நண்பரைக்குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன்; செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.

2 ⁽அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக்␢ கற்களைக் களைந்தெடுத்தார்;␢ நல்ல இனத் திராட்சைச் செடிகளை␢ அதில் நட்டுவைத்தார்;␢ அவற்றைக் காக்கும் பொருட்டுக்␢ கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்;␢ திராட்சைப் பழம் பிழிய␢ ஆலை ஒன்றை அமைத்தார்;␢ நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென␢ எதிர்பார்த்து காத்திருந்தார்;␢ மாறாக, காட்டு பழங்களையே␢ அது தந்தது.⁾

3 ⁽இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்;␢ எருசலேமில் குடியிருப்போரே,␢ யூதாவில் வாழும் மனிதரே,␢ எனக்கும் என் திராட்சைத்␢ தோட்டத்திற்கும் இடையே␢ நீதி வழங்குங்கள்.⁾

4 ⁽என் திராட்சைத் தோட்டத்திற்குச்␢ செய்யாது நான் விட்டு விட்டதும்␢ இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ?␢ நற்கனிகளைத் தரும் என்று␢ நான் காத்திருக்க,␢ காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?⁾

5 ⁽என் திராட்சைத் தோட்டத்திற்குச்␢ செய்யப் போவதை உங்களுக்கு␢ நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்;␢ “நானே அதன் வேலியைப்␢ பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்;␢ அதன் சுற்றுச் சுவரைத்␢ தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும்.⁾

6 ⁽நான் அதைப் பாழாக்கி விடுவேன்;␢ அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை;␢ களையை அகற்ற␢ மண் கொத்தப்படுவதுமில்லை;␢ நெருஞ்சியும், முட்புதர்களுமே␢ அதில் முளைக்கும்;␢ அதன்மீது மழை பொழியாதிருக்க␢ மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.”⁾

7 ⁽படைகளின் ஆண்டவரது␢ திராட்சைத் தோட்டம்␢ இஸ்ரயேல் குடும்பத்தாரே;␢ அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று␢ யூதா மக்களே;␢ நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்;␢ ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி;␢ நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்;␢ ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.⁾

8 ⁽வீட்டோடு வீடு சேர்ப்பவர்களே,␢ வயலோடு வயல்␢ இணைத்துக் கொள்பவர்களே,␢ உங்களுக்கு ஐயோ கேடு!␢ பிறருக்கு இடமில்லாது நீங்கள்மட்டும்␢ தனித்து நாட்டில் வாழ்வீர்களோ?⁾

9 ⁽என் காது கேட்கப் படைகளின் ஆண்டவர்␢ ஆணையிட்டுக் கூறியது இதுவே:␢ “மெய்யாகவே பல இல்லங்கள்␢ பாழடைந்து போகும்:␢ அழகுவாய்ந்த பெரிய மாளிகைகள்␢ தங்குவதற்கு ஆள் இல்லாமற் போகும்.⁾

10 ⁽ஏனெனில் பத்து ஏக்கர்␢ திராட்சைத் தோட்டம்␢ ஒரு குடம் இரசம்தான் கொடுக்கும்;␢ பத்துக் கலம் விதை விதைத்தால்,␢ ஒரு கலமே விளையும்.⁾

11 ⁽விடியற் காலையிலேயே விழித்தெழுந்து,␢ போதை தரும் மதுவை நாடி அலைந்து,␢ இரவுவரை குடித்துப்␢ பொழுதைப் போக்குகிறவர்களுக்கோ␢ ஐயோ, கேடு!⁾

12 ⁽அவர்கள் கேளிக்கை விருந்துகளில்␢ கின்னரம், வீணை, தம்புரு, மதுபானம்␢ இவையெல்லாம் உண்டு; ஆனால்␢ ஆண்டவரின் செயல்களை␢ அவர்கள் நினைவுகூர்வதில்லை;␢ அவருடைய கைவினைகளை நோக்கிப் பார்ப்பதுமில்லை.⁾

13 ⁽ஆதலால் அறியாமையால் என் மக்கள்␢ நாடு கடத்தப்படுகின்றார்கள்;␢ அவர்களில் பெருமதிப்பிற்குரியோர்␢ பசியால் மடிகின்றார்கள்;␢ பொதுமக்கள் தாகத்தால்␢ நாவறண்டு போகின்றார்கள்;⁾

14 ⁽ஆதலால் பாதாளம் தன் வாயை␢ அளவுகடந்து பிளந்துள்ளது;␢ தன் பசியைப் பெருக்கியிருக்கிறது.␢ எருசலேமின் உயர்குடிமக்கள்,␢ பொதுமக்கள், திரள் கூட்டத்தார்,␢ அதில் களியாட்டம் புரிவோர் ஆகியோர்␢ ஒருங்கே அதனுள் இறங்குவார்கள்.⁾

15 ⁽மனிதர் தலைகுனிவர்,␢ மானிடமைந்தர் தாழ்வுறுவர்,␢ இறுமாப்புக் கொண்டோரின் பார்வை␢ தாழ்ச்சியடையும்.⁾

16 ⁽ஆனால் படைகளின் ஆண்டவர்␢ தம் நீதியால் உயர்ந்திருப்பார்;␢ தூயவராம் இறைவன் தம் நேர்மையால்␢ தம்மைத் தூயவராக வெளிப்படுத்துவார்.⁾

17 ⁽அப்பொழுது ஆட்டுக்குட்டிகள்␢ தங்கள் மேய்ச்சல் நிலத்தில்␢ மேய்வதுபோல மேயும்,␢ வெள்ளாட்டுக் குட்டிகளும்␢ இளங்கன்றுகளும்␢ பாழடைந்த இடங்களில் மேயும்.⁾

18 ⁽பொய்ம்மை என்னும் கயிறுகளால்␢ தீச்செயலைக் கட்டி இழுத்து,␢ வண்டியைக் கயிற்றால் இழுப்பது போலப்␢ பாவத்தையும் கட்டி இழுப்பவர்களுக்கு␢ ஐயோ கேடு!⁾

19 ⁽‘நாங்கள் பார்க்கும்படி அவர்␢ விரைவாய் வந்து, தம் வேலையைத்␢ துரிதமாய்ச் செய்யட்டும்;␢ நாங்கள் அறியும்படி,␢ இஸ்ரயேலின் தூயவர்␢ தம் நோக்கத்தை வெளிப்படுத்தி␢ அதை நிறைவேற்றட்டும்’ என்று␢ சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!⁾

20 ⁽தீமையை நன்மை என்றும்,␢ நன்மையைத் தீமை என்றும் சொல்லி,␢ இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி,␢ கசப்பை இனிப்பாக்கி,␢ இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு␢ ஐயோ கேடு!⁾

21 ⁽தங்கள் பார்வையில் ஞானிகள் என்னும்,␢ தங்கள் கணிப்பில்␢ கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும்␢ தங்களையே கருதுபவர்களுக்கு␢ ஐயோ கேடு!⁾

22 ⁽திராட்சை இரசம் குடிப்பதில்␢ தீரர்களாகவும், மதுபானம் கலப்பதில்␢ திறமைசாலிகளாகவும் இருப்பவர்களுக்கு␢ ஐயோ கேடு!⁾

23 ⁽அவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு,␢ குற்றவாளியை நேர்மையாளர் எனத்␢ தீர்ப்பிடுகின்றார்கள்;␢ குற்றமற்றவருக்கு நீதி கிடைப்பதைத்␢ தடை செய்கின்றார்கள்;⁾

24 ⁽ஆதலால், நெருப்புத் தணல்␢ வைக்கோலை எரித்துச்␢ சாம்பலாக்குவது போல,␢ காய்ந்த புல் தீக்கிரையாக்கித்␢ தீய்ந்து போவது போல,␢ அவர்கள் ஆணிவேர் அழுகிப்போகும்;␢ அவர்கள் வழிமரபு␢ துரும்புபோல் பறந்து போகும்;␢ ஏனெனில் அவர்கள்,␢ படைகளின் ஆண்டவரது␢ திருச்சட்டத்தைப் புறக்கணித்தார்கள்;␢ இஸ்ரயேலின் தூயவரது வாக்கை␢ வெறுத்துத் தள்ளினார்கள்.⁾

25 ⁽ஆதலால், ஆண்டவரின் சினத் தீ␢ அவருடைய மக்களுக்கு எதிராகக்␢ கிளர்ந்தெழுந்தது,␢ அவர்களுக்கு எதிராக அவர்␢ தம் கையை நீட்டி␢ அவர்களை நொறுக்கினார்.␢ மலைகள் நடுநடுங்கின;␢ அவர்களுடைய சடலங்கள் நடுத்தெருவில்␢ நாதியற்றுக் குப்பை போல் கிடந்தன;␢ இவையெல்லாம் நடந்தும்␢ அவரது சீற்றம் தணியவில்லை.␢ நீட்டிய சினக்கை␢ இன்னும் மடங்கவில்லை.⁾

26 ⁽அவர் தொலையிலுள்ள பிற இனத்துக்கு␢ ஓர் அடையாளக் கொடியைக்␢ காட்டியுள்ளார்;␢ மண்ணுலகின் எல்லைகளிலிருந்து␢ சீழ்க்கை ஒலியால் அதனை␢ அழைத்துள்ளார்,␢ அந்த இனம் வெகுவிரைவாய்␢ வந்து கொண்டிருக்கின்றது.⁾

27 ⁽அவர்களுள் ஒருவனும்␢ களைப்படையவில்லை;␢ இடறி விழவில்லை; தூங்கவில்லை;␢ உறங்கவுமில்லை;␢ அவர்களில் யாருக்கேனும்␢ இடுப்புக்கச்சை அவிழ்ந்து விழவில்லை;␢ மிதியடிகளின் வாரேதும்␢ அறுந்து போகவுமில்லை.⁾

28 ⁽அவர்களுடைய அம்புகள்␢ கூர்மையானவை; அவர்களுடைய␢ விற்கள் நாணேற்றப்பட்டுள்ளன;␢ அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள்␢ கருங்கற்களைப் போல்␢ காட்சியளிக்கின்றன;␢ அவர்களுடைய தேர்ச் சக்கரங்கள்␢ சூறாவளிக் காற்றைப்போல் சுழல்கின்றன.⁾

29 ⁽அவர்களின் கர்ச்சனை␢ பெண் சிங்கத்தினுடையதை ஒத்தது;␢ இளஞ் சிங்கங்களைப்போல் அவர்கள்␢ கர்ச்சிக்கிறார்கள்;␢ உறுமிக்கொண்டு தங்கள் இரையைக்␢ கவ்விப் பிடிப்பார்கள்;␢ யாரும் விடுவிக்க இயலாதவாறு␢ இரையை எடுத்துக்கொண்டு␢ போய் விடுவார்கள்.⁾

30 ⁽அந்நாளில் கடலின் பேரிரைச்சல்போல்␢ இஸ்ரயேலுக்கு எதிராக␢ இரைந்து உறுமுவார்கள்;␢ நாட்டை ஒருவன் பார்க்கையில்,␢ இருளும் துன்பமுமே காண்பான்;␢ மேகத்திரள் ஒளியை விழுங்கிவிட்டது.⁾

ஏசாயா 5 ERV IRV TRV