1 அந்நாளில் ஆண்டவர் தம் கொடிய, பெரிய, வலிமைமிகு வாளால் லிவியத்தான் என்னும் விரைந்தோடும் பாம்பை — லிவியத்தான் என்னும் நெளிந்தோடும் பாம்பை — தண்டிப்பார்; கடலில் இருக்கும் அந்தப் பெரும் நாகத்தை அவர் வெட்டி வீழ்த்துவார்.

2 ⁽அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத்␢ தோட்டம் இருக்கும்; அதைப்பற்றிப் பாடுங்கள்.⁾

3 ⁽ஆண்டவராகிய நானே␢ அதன் பாதுகாவலர்;␢ இடையறாது அதற்கு நான்␢ நீர் பாய்ச்சுகின்றேன்;␢ எவரும் அதற்குத்␢ தீங்கு விளைவிக்காதவாறு␢ இரவும் பகலும்␢ அதற்குக் காவலாய் இருக்கின்றேன்.⁾

4 ⁽சினம் என்னிடம் இல்லை;␢ நெருஞ்சியையும் முட்புதரையும்␢ என்னோடு போரிடச் செய்தவன் எவன்?␢ நான் அவற்றிற்கு எதிராக␢ அணி வகுத்துச்சென்று,␢ அவற்றை ஒருங்கே␢ நெருப்புக்கு இரையாக்குவேன்.⁾

5 ⁽அவர்கள் என்னைப்␢ புகலிடமாகக் கொண்டு வலிமை பெறட்டும்;␢ என்னோடு அவர்கள்␢ ஒப்புரவு செய்து கொள்ளட்டும்,␢ என்னோடு அவர்கள்␢ சமாதானம் செய்து கொள்ளட்டும்.⁾

6 ⁽வருங்காலத்தில் யாக்கோபு␢ வேரூன்றி நிற்பான்;␢ இஸ்ரயேல் பூத்து மலருவான்;␢ உலகத்தையெல்லாம்␢ கனிகளால் நிரப்புவான்.⁾

7 ⁽அவனை அடித்து நொறுக்கியோரை␢ ஆண்டவர் அடித்து நொறுக்கியது போல்,␢ அவனையும் அவர்␢ அடித்து நொறுக்கியது உண்டோ?␢ அவனை வெட்டி வீழ்த்தியோரை␢ அவர் வெட்டி வீழ்த்தியதுபோல்,␢ அவனையும் அவர்␢ வெட்டி வீழ்த்தியது உண்டோ?⁾

8 ⁽துரத்தியடித்து வெளியேற்றியதன் மூலம்␢ அவர் அவனோடு போராடினார்;␢ கீழைக்காற்றின் நாளில்␢ சூறைக்காற்றால்␢ அவனைத் தூக்கி எறிந்தார்.⁾

9 ⁽ஆதலால் இதன் வாயிலாய்␢ யாக்கோபின் குற்றத்திற்காகப்␢ பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்.␢ அவனது பாவம் அகற்றப்பட்டதன்␢ முழுப் பயன் இதுவே:␢ சுண்ணாம்புக் கற்களை உடைத்துத்␢ தூள் தூளாக்குவது போல␢ அவர் அவர்களின்␢ பலிபீடக் கற்களுக்குச் செய்வார்;␢ அசேராக் கம்பங்களும் தூபபீடங்களும்␢ நிலைநிற்காதவாறு நொறுக்கப்படும்.⁾

10 ⁽அரண் சூழ்ந்த நகரம்␢ தனித்து விடப்பட்டுள்ளது;␢ குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது.␢ பாலைநிலம் போல்␢ புறக்கணிக்கப்பட்டுள்ளது;␢ ஆங்கே, கன்றுக்குட்டி மேய்கின்றது,␢ படுத்துக்கிடக்கின்றது;␢ அதில் தழைத்துள்ளவற்றைத்␢ தின்று தீர்க்கின்றது.⁾

11 ⁽உலர்ந்த அதன் கிளைகள்␢ முறிக்கப்படுகின்றன;␢ பெண்டிர் வந்து அவற்றைச் சுட்டெறிப்பர்;␢ ஏனெனில் உணர்வற்ற மக்களினம் அது;␢ ஆதலால், அவர்களைப் படைத்தவர்␢ அவர்கள் மீது இரக்கம் காட்டார்;␢ அவர்களை உருவாக்கியவர்␢ அவர்களுக்கு ஆதரவு அருளார்.⁾

12 அந்நாளில் ஆண்டவர் பேராற்றின் வாய்க்கால் முதல் எகிப்தின் பள்ளத்தாக்குவரை புணையடிப்பார்; இஸ்ரயேல் மக்களே, நீங்கள் ஒருவர்பின் ஒருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.⒫

13 அந்நாளில் பெரியதோர் எக்காளம் முழங்கும். அப்பொழுது, அசீரியா நாட்டில் சிதறுண்டோரும் எகிப்து நாட்டுக்குத் துரத்தப்பட்டோரும் திரும்பி வருவர். எருசலேமின் திருமலையில் அவர்கள் ஆண்டவரை வழிபடுவார்கள்.

ஏசாயா 27 ERV IRV TRV