1 ⁽அனைத்துலகோரே!␢ கடவுளைப் போற்றி␢ ஆர்ப்பரியுங்கள்!⁾

2 ⁽அவரது பெயரின் மாட்சியைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.⁾

3 ⁽கடவுளை நோக்கி␢ ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை;␢ உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக␢ உம் எதிரிகள் உமது முன்னலையில்␢ கூனிக் குறுகுவர்;⁾

4 ⁽அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;␢ அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;␢ உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’␢ என்று சொல்லுங்கள். (சேலா)⁾

5 ⁽வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!␢ அவர் மானிடரிடையே ஆற்றிவரும்␢ செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.⁾

6 ⁽கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;␢ ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.␢ அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.⁾

7 ⁽அவர் தமது வலிமையால்␢ என்றென்றும் அரசாள்கிறார்!␢ அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக்␢ கவனித்து வருகின்றன;␢ கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த்␢ தலைதூக்காதிருப்பராக! (சேலா)⁾

8 ⁽மக்களினங்களே!␢ நம் கடவுளைப் போற்றுங்கள்;␢ அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி␢ கேட்கச் செய்யுங்கள்.⁾

9 ⁽நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;␢ அவர் நம் கால்களை இடற விடவில்லை.⁾

10 ⁽கடவுளே! எங்களை ஆய்ந்து,␢ வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;⁾

11 ⁽கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்;␢ பளுவான சுமைகளை␢ எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.⁾

12 ⁽மனிதரை எங்கள் தலைகள்மீது␢ நடந்துபோகச் செய்தீர்;␢ நெருப்பிலும் தண்ணீரிலும்␢ அகப்பட்டிருந்தோம்; ஆயினும்,␢ நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக்␢ கொண்டுவந்து சேர்த்தீர்.⁾

13 ⁽எரிபலியுடன்␢ உமது இல்லத்தினுள் செல்வேன்;␢ என் பொருத்தனைகளை␢ உமக்குச் செலுத்துவேன்.⁾

14 ⁽அவற்றை என் துன்ப வேளையில்␢ என் நா உரைத்தது;␢ என் வாய் உறுதி செய்தது.⁾

15 ⁽கொழுத்த கன்றுகளை,␢ செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு,␢ உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்;␢ காளைகளையும்␢ வெள்ளாட்டுக் கிடாய்களையும்␢ உமக்குப் பலியிடுவேன். (சேலா)⁾

16 ⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போரே!␢ அனைவரும் வாரீர்! கேளீர்!␢ அவர் எனக்குச் செய்ததனை␢ எடுத்துரைப்பேன்.⁾

17 ⁽அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது;␢ அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.⁾

18 ⁽என் உள்ளத்தில் தீய எண்ணங்களை␢ வளர்த்திருந்தேனாகில்,␢ என் தலைவர் எனக்குச்␢ செவிசாய்த்திருக்கமாட்டார்.⁾

19 ⁽ஆனால், உண்மையில்␢ கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்;␢ என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.⁾

20 ⁽என் மன்றாட்டைப் புறக்கணியாத␢ கடவுள் போற்றி!␢ தம் பேரன்பை என்னிடமிருந்து␢ நீக்காத இறைவன் போற்றி!⁾

சங்கீதம் 66 ERV IRV TRV