நெகேமியா 7

fullscreen1 அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும் பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,

fullscreen2 நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல்விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.

fullscreen3 அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம், நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.

fullscreen4 பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.

fullscreen5 அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்,

fullscreen6 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,

fullscreen7 எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:

fullscreen8 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.

fullscreen9 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.

fullscreen10 ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.

fullscreen11 யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.

fullscreen12 ஏலாமின் புத்திரர் ஆயிரத்திருநூற்று ஐம்பத்துநாலுபேர்.

fullscreen13 சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.

fullscreen14 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.

fullscreen15 பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

fullscreen16 பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.

fullscreen17 அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்.

fullscreen18 அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்.

fullscreen19 பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.

fullscreen20 ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.

fullscreen21 எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.

fullscreen22 ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர்.

fullscreen23 பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்.

fullscreen24 ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.

fullscreen25 கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர்.

fullscreen26 பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.

fullscreen27 ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.

fullscreen28 பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர்.

fullscreen29 கீரியாத்யாரீம், கெபிராபேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.

fullscreen30 ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.

fullscreen31 மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.

fullscreen32 பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.

fullscreen33 வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.

fullscreen34 மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.

fullscreen35 ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.

fullscreen36 எரிகோ புத்திரர் முந்நூற்று அறுபத்தைந்துபேர்.

fullscreen37 லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.

fullscreen38 செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.

fullscreen39 ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.

fullscreen40 இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

fullscreen41 பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.

fullscreen42 ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.

fullscreen43 லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.

fullscreen44 பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

fullscreen45 வாசல் காவலாளரானவர்கள்; சல்லுூமின் புத்திரர் அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.

fullscreen46 நிதனீமியரானவர்கள்: சீகாவின்புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,

fullscreen47 கேரோசின் புத்திரர், சீயாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,

fullscreen48 லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர்,

fullscreen49 ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர்,

fullscreen50 ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர்,

fullscreen51 காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர்,

fullscreen52 பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர்,

fullscreen53 பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,

fullscreen54 பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,

fullscreen55 பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,

fullscreen56 நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர்,

fullscreen57 சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,

fullscreen58 யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,

fullscreen59 செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.

fullscreen60 நிதனிமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.

fullscreen61 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:

fullscreen62 தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.

fullscreen63 ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர்.

fullscreen64 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய் ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

fullscreen65 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

fullscreen66 சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

fullscreen67 அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும் இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

fullscreen68 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.

fullscreen69 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.

fullscreen70 வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும் ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான்.

fullscreen71 வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.

fullscreen72 மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.

fullscreen73 ஆசாரியரும் லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும் நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதென்று அறிந்து, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடுக்காமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.

Tamil Easy Reading Version
“கடன்களை ரத்து செய்யும் ஏழாவது ஆண்டு சமீபமாக வந்துவிட்டது என்பதால், ஏழைக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. இப்படிப்பட்ட ஒரு கெட்ட சிந்தை உன் மனதில் நுழைய இடம் கொடாதே. தேவை உள்ள ஏழையைக் குறித்து ஒருபோதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே. அவனுக்கு உதவிச்செய்ய மறுத்து விடாதே. அப்படி நீங்கள் உதவவில்லையென்றால், அவன் உங்களுக்கு எதிராகக் கர்த்தரிடத்தில் முறையிடுவான். அப்போது கர்த்தர் அதை உங்கள் மேல் குற்றமாகச் சுமத்துவார்.

Thiru Viviliam
விடுதலை ஆண்டாகிய ஏழாம் ஆண்டு அண்மையில் உள்ளதே என்று ஏங்குமாறு உன் உள்ளத்தில் நெறி கெட்ட சிந்தனைகள் எழாதபடி எச்சரிக்கையாய் இரு. ஏனெனில், உன் வறிய சகோதரனை எரிச்சலுடன் நோக்கி, அவனுக்கு எதுவும் தரவில்லையெனில், உனக்கு எதிராக அவன் ஆண்டவரிடம் முறையிடுவான். அது உன்னைக் குற்றத்திற்கு உள்ளாக்கும்.

Deuteronomy 15:8Deuteronomy 15Deuteronomy 15:10

King James Version (KJV)
Beware that there be not a thought in thy wicked heart, saying, The seventh year, the year of release, is at hand; and thine eye be evil against thy poor brother, and thou givest him nought; and he cry unto the LORD against thee, and it be sin unto thee.

American Standard Version (ASV)
Beware that there be not a base thought in thy heart, saying, The seventh year, the year of release, is at hand; and thine eye be evil against thy poor brother, and thou give him nought; and he cry unto Jehovah against thee, and it be sin unto thee.

Bible in Basic English (BBE)
And see that there is no evil thought in your heart, moving you to say to yourself, The seventh year, the year of forgiveness is near; and so looking coldly on your poor countryman you give him nothing; and he will make an outcry to the Lord against you, and it will be judged as sin in you.

Darby English Bible (DBY)
Beware that there be not a wicked thought in thy heart, saying, The seventh year, the year of release, is at hand; and thine eye be evil against thy poor brother, and thou givest him nought; and he cry against thee to Jehovah, and it be sin in thee.

Webster’s Bible (WBT)
Beware that there be not a thought in thy wicked heart, saying, The seventh year, the year of release, is at hand; and thy eye shall be evil against thy poor brother, and thou shalt give him naught; and he shall cry to the LORD against thee, and it shall be sin to thee.

World English Bible (WEB)
Beware that there not be a base thought in your heart, saying, The seventh year, the year of release, is at hand; and your eye be evil against your poor brother, and you give him nothing; and he cry to Yahweh against you, and it be sin to you.

Young’s Literal Translation (YLT)
`Take heed to thee lest there be a word in thy heart — worthless, saying, Near `is’ the seventh year, the year of release; and thine eye is evil against thy needy brother, and thou dost not give to him, and he hath called concerning thee unto Jehovah, and it hath been in thee sin;

உபாகமம் Deuteronomy 15:9
விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன் கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.
Beware that there be not a thought in thy wicked heart, saying, The seventh year, the year of release, is at hand; and thine eye be evil against thy poor brother, and thou givest him nought; and he cry unto the LORD against thee, and it be sin unto thee.

Beware
הִשָּׁ֣מֶרhiššāmerhee-SHA-mer
that
לְךָ֡lĕkāleh-HA
there
be
פֶּןpenpen
thought
a
not
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
in
דָבָר֩dābārda-VAHR
thy
wicked
עִםʿimeem
heart,
לְבָֽבְךָ֙lĕbābĕkāleh-va-veh-HA
saying,
בְלִיַּ֜עַלbĕliyyaʿalveh-lee-YA-al
seventh
The
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
year,
קָֽרְבָ֣הqārĕbâka-reh-VA
the
year
שְׁנַֽתšĕnatsheh-NAHT
of
release,
הַשֶּׁבַע֮haššebaʿha-sheh-VA
hand;
at
is
שְׁנַ֣תšĕnatsheh-NAHT
and
thine
eye
הַשְּׁמִטָּה֒haššĕmiṭṭāhha-sheh-mee-TA
evil
be
וְרָעָ֣הwĕrāʿâveh-ra-AH
against
thy
poor
עֵֽינְךָ֗ʿênĕkāay-neh-HA
brother,
בְּאָחִ֙יךָ֙bĕʾāḥîkābeh-ah-HEE-HA
givest
thou
and
הָֽאֶבְי֔וֹןhāʾebyônha-ev-YONE
him
nought;
וְלֹ֥אwĕlōʾveh-LOH
cry
he
and
תִתֵּ֖ןtittēntee-TANE
unto
ל֑וֹloh
the
Lord
וְקָרָ֤אwĕqārāʾveh-ka-RA
against
עָלֶ֙יךָ֙ʿālêkāah-LAY-HA
be
it
and
thee,
אֶלʾelel
sin
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
thee.
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
בְךָ֖bĕkāveh-HA
חֵֽטְא׃ḥēṭĕʾHAY-teh