மத்தேயு 7

fullscreen1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.

fullscreen2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

fullscreen3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

fullscreen4 இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

fullscreen5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

fullscreen6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

fullscreen7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் Εொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

fullscreen8 ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

fullscreen9 உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?

fullscreen10 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?

fullscreen11 ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

fullscreen12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

fullscreen13 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

fullscreen14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

fullscreen15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

fullscreen16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

fullscreen17 அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.

fullscreen18 நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.

fullscreen19 நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

fullscreen20 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

fullscreen21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

fullscreen22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.

fullscreen23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

fullscreen24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

fullscreen25 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

fullscreen26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

fullscreen27 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

fullscreen28 இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,

fullscreen29 ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Cross Reference

Ezekiel 24:6
ଏଣୁ ସଦାପ୍ରଭୁ, ମାରେ ପ୍ରଭୁ ଏହି କଥା କହନ୍ତି, 'ୟିରୁଶାଲମ, ଏକ ରକ୍ତାକ୍ତ ନଗରୀ। ସହେି ହଣ୍ଡା, ଯାହା ମଧିଅରେ କଳଙ୍କ ରହିଛି ଓ ଯାହାର କଳଙ୍କ ତା' ମଧ୍ଯରୁ ଦୂର ହାଇେ ନାହିଁ। ପାତ୍ର ମଧ୍ଯରୁ ପ୍ରେତ୍ୟକକ ମାଂସ ଖଣ୍ଡ ବାହାର କର। କ'ଣ ଖାଇବାକୁ ହବେ ଓ କ'ଣ ଖାଇବାକୁ ନ ହବେ ସେଥିପାଇଁ ଗୁଳାବାଣ୍ଟ କର ନାହିଁ, ଏହାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଶୂନ୍ଯ କରିଦିଅ।

Nahum 2:12
ସିଂହ ନୀନିବୀର ରାଜା ତା'ର ଶାବକମାନଙ୍କୁ ଖୁଆଇବା ପାଇଁ ବହୁତ ଶିକାର କଲା ଏବଂ ସିଂହୀ ପାଇଁ ଶିକାର କଲା। ସେ ତା'ର ନୀନିବୀ ଗୁମ୍ଫାକୁ ଶିକାର ରେ ପରିପୂର୍ଣ୍ଣ କଲା! ସେ ତା'ର ଗୁମ୍ଫାକୁ ମାଂସ ରେ ପୂର୍ଣ୍ଣ କଲା।

Habakkuk 2:12
ଧିକ୍ ତୁମ୍ଭମାନଙ୍କୁ, ଯେଉଁମାନେ ଲୋକମାନଙ୍କୁ ମାରି ନଗର ନିର୍ମାଣ କରିଛ ଏବଂ ଦୁଷ୍ଟତା ରେ ସହର ପ୍ରତିଷ୍ଠା କରିଛ।

Zephaniah 3:1
ହେ ୟିରୁଶାଲମ, ତୁମ୍ଭ ଲୋକମାନେ ପରମେଶ୍ବରଙ୍କ ବିରୁଦ୍ଧ ରେ ସଂଗ୍ରାମ କଲେ। ସମାନେେ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଆଘାତ କଲେ ଏବଂ ସମାନେେ ପାପ ରେ କଳୁଷିତ ହାଇଗେଲେ।

Ezekiel 22:2
ହେ ମନୁଷ୍ଯ ପୁତ୍ର, ତୁମ୍ଭେ କ'ଣ ଏହି ରକ୍ତପାତ ନଗରୀର ବିଚାର କରିବ ? ତବେେ ତାହାର ଘୃଣା ଯୋଗ୍ଯ ସମସ୍ତ କ୍ରିଯା ଏହାକୁ ଜ୍ଞାତ କରାଅ।

Hosea 4:2
ଏହି ଲୋକମାନେ ଶପଥ, ମିଥ୍ଯା, ହତ୍ଯା ଓ ଗ୍ଭରେି କରନ୍ତି। ସମାନେେ ବ୍ଯଭିଗ୍ଭରିତାର ପାପ ଦ୍ବାରା ସନ୍ତାନ ଲାଭ କରନ୍ତି। ସମାନେେ ବାରମ୍ବାର ନରହତ୍ଯା କରନ୍ତି।

Isaiah 17:14
ସନ୍ଧ୍ଯା ରେ ସମାନେେ ଭୟଭୀତ ହବେେ ଓ ପ୍ରଭାତ ପୂର୍ବରୁ ଲୋପ ପାଇୟାଇଥିବେ। ତେଣୁ ଆମ୍ଭର ଶତ୍ରୁ ଓ ଅପହରଣୀକାରୀ କିଛି ସଠାେ ରେ ଦେଖିବାକୁ ପାଇବେ ନାହିଁ।

Isaiah 24:9
ଲୋକମାନେ ସୁରାପାନ କଲା ବେଳେ ଆଉ ଆନନ୍ଦ ସଙ୍ଗୀତ ଗାଉ ନାହାଁନ୍ତି। ସୁରାପାନ ସମାନଙ୍କେୁ ତିକ୍ତ ବୋଧ ହେଉଅଛି।

Isaiah 42:24
ଯାକୁବକୁ ଲୁଣ୍ଠିତ ହବୋ ପାଇଁ ଇଶ୍ରାୟେଲକୁ ଅପହରଣ କରିବା ପାଇଁ କିଏ ଅପହରଣକାରୀଙ୍କ ହସ୍ତ ରେ ସମର୍ପଣ କଲେ ? ଏସବୁ ସଦାପ୍ରଭୁ ହିଁ କରାଇଲେ। କାରଣ ଆମ୍ଭମାନେେ ତାଙ୍କ ବିରୁଦ୍ଧ ରେ ପାପ କରିଅଛୁ ଓ ତାଙ୍କ ଦର୍ଶିତ ପଥରେ ଗମନ କରି ନାହୁଁ। ଇଶ୍ରାୟେଲର ଲୋକମାନେ ମଧ୍ଯ ତାଙ୍କ ବାକ୍ଯ ଶୁଣି ନାହାଁନ୍ତି।