1 ⁽இதோ! இவை என் கண்களே கண்டவை;␢ என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.⁾

2 ⁽நீங்கள் அறிந்திருப்பதை␢ நானும் அறிந்திருக்கின்றேன்;␢ நான் உங்களுக்கு␢ எதிலும் இளைத்தவன் இல்லை.⁾

3 ⁽ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு␢ சொல்லாடுவேன்;␢ கடவுளோடு வழக்காட விழைகின்றேன்,⁾

4 ⁽நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்;␢ நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள்.⁾

5 ⁽ஐயோ! பேசாது␢ அனைவரும் அமைதியாக இருங்கள்;␢ அதுவே உங்களுக்கு ஞானமாகும்.⁾

6 ⁽இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்;␢ என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள்.⁾

7 ⁽இறைவன் பொருட்டு␢ முறைகேடாய்ப் பேசுவீர்களா?␢ அவர்பொருட்டு வஞ்சகமாய்ப் பேசுவீர்களா?⁾

8 ⁽கடவுள் பொருட்டு␢ ஒரு சார்பாகப் பேசுவீர்களா? அல்லது␢ அவர்க்காக வாதாடுவீர்களா?⁾

9 ⁽அவர் உங்களை ஆராய்ந்தால்␢ உங்களில் நல்லதைக் காண்பாரா?␢ அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல,␢ அவரையும் வஞ்சிப்பீர்களா?⁾

10 ⁽நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால்␢ உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.⁾

11 ⁽அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா?␢ அவருடைய அச்சுறுத்தல்␢ உங்கள் மீது விழாதா?⁾

12 ⁽உங்களுடைய மூதுரைகள்␢ சாம்பலையொத்த முதுமொழிகள்;␢ உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில்␢ களிமண்ணையொத்த வாதங்கள்.⁾

13 ⁽பேசாதிருங்கள்; என்னைப் பேசவிடுங்கள்;␢ எனக்கு எது வந்தாலும் வரட்டும்.⁾

14 ⁽என் சதையை என் பற்களிடையே␢ ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்?␢ என் உயிரை என் கைகளால்␢ ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?⁾

15 ⁽அவர் என்னைக்␢ கொன்றாலும் கொல்லட்டும்;␢ இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என␢ எடுத்துரைப்பதில் நான் தளரேன்.⁾

16 ⁽இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்;␢ ஏனெனில், இறைப்பற்றில்லாதார்␢ அவர்முன் வர முடியாது.⁾

17 ⁽என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்;␢ என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.⁾

18 ⁽இதோ! இப்பொழுது என் வழக்கை␢ வகைப்படுத்தி வைத்தேன்;␢ குற்றமற்றவன் என␢ மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.⁾

19 ⁽இறைவா! நீர்தாமோ␢ எனக்கெதிராய் வழக்காடுவது?␢ அவ்வாறாயின், இப்போதே␢ வாய்பொத்தி உயிர் நீப்பேன்.⁾

20 ⁽எனக்கு இரண்டு␢ செயல்களை மட்டும் செய்யும்;␢ அப்போது உமது முகத்திலிருந்து␢ ஒளியமாட்டேன்.⁾

21 ⁽உமது கையை␢ என்னிடமிருந்து எடுத்துவிடும்;␢ உம்மைப்பற்றிய திகில்␢ என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும்.⁾

22 ⁽பின்னர் என்னைக் கூப்பிடும்;␢ நான் விடையளிப்பேன்;␢ அல்லது என்னைப் பேசவிடும்;␢ பின் நீர் மறுமொழி அருளும்.⁾

23 ⁽என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை?␢ என் மீறுதலையும் தீமையையும்␢ எனக்குணர்த்தும்.⁾

24 ⁽உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்?␢ பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?⁾

25 ⁽காற்றடித்த சருகைப்␢ பறக்கடிப்பீரோ?␢ காய்ந்த கூளத்தைக் கடிது விரட்டுவீரோ?⁾

26 ⁽கசப்பானவற்றை␢ எனக்கெதிராய் எழுதுகின்றீர்;␢ என் இளமையின் குற்றங்களை␢ எனக்கு உடைமையாக்குகின்றீர்.⁾

27 ⁽என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்;␢ கண் வைத்தீர் என் பாதை எல்லாம்;␢ காலடிக்கு எல்லை குறித்துக்␢ குழிதோண்டினீர்.⁾

28 ⁽மனிதர் உளுத்தமரம்போல்␢ விழுந்து விடுகின்றனர்; அந்துப்பூச்சி␢ அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர்.⁾

யோபு 13 ERV IRV TRV