நெகேமியா 10

fullscreen1 முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,

fullscreen2 செராயா, அசரியா, எரேமியா,

fullscreen3 பஸ்கூர் அமரியா, மல்கிஜா,

fullscreen4 அத்தூஸ், செபனியா, மல்லுூக்,

fullscreen5 ஆரீம், மெரெமோத், ஒபதியா,

fullscreen6 தானியேல், கிநேதோன், பாருக்,

fullscreen7 மெசுல்லாம், அபியா, மீயாமின்,

fullscreen8 மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,

fullscreen9 லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,

fullscreen10 அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,

fullscreen11 மீகா, ரேகோப், அசபியா,

fullscreen12 சக்கூர், செரெபியா, செபனியா,

fullscreen13 ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,

fullscreen14 ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,

fullscreen15 புன்னி, அஸ்காத், பெபாயி,

fullscreen16 அதோனியா, பிக்வாய், ஆதின்,

fullscreen17 ஆதேர், இஸ்கியா, அசூர்,

fullscreen18 ஒதியா, ஆசூ, பெத்சாய்,

fullscreen19 ஆரீப், ஆனதோத், நெபாய்,

fullscreen20 மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,

fullscreen21 மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,

fullscreen22 பெலத்தியா, ஆனான், ஆனாயா,

fullscreen23 ஓசெயா, அனனியா, அசூப்,

fullscreen24 அல்லோகேஸ், பிலகா, சோபேக்,

fullscreen25 ரேகூம், அஷபனா, மாசெயா,

fullscreen26 அகியா, கானான், ஆனான்,

fullscreen27 மல்லுூக், ஆரிம், பானா என்பவர்களுமே.

fullscreen28 ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும் வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுΠξகிய அறிவும் Ϊுத்தியும் உள͠γவர்களெல்லாரும்,

fullscreen29 தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,

fullscreen30 நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும்,

fullscreen31 தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.

fullscreen32 மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்தியபோஜனபலிக்கும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும் பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காக பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,

fullscreen33 எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.

fullscreen34 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும், லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.

fullscreen35 நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,

fullscreen36 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்,

fullscreen37 நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,

fullscreen38 லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.

fullscreen39 பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும் வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

Tamil Easy Reading Version
பூமியிலிருந்து தண்ணீர் எழும்பி நிலத்தை நனைத்தது.

Thiru Viviliam
ஆனால், நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி நிலம் முழுவதையும் நனைத்தது.

ஆதியாகமம் 2:5ஆதியாகமம் 2ஆதியாகமம் 2:7

King James Version (KJV)
But there went up a mist from the earth, and watered the whole face of the ground.

American Standard Version (ASV)
but there went up a mist from the earth, and watered the whole face of the ground.

Bible in Basic English (BBE)
But a mist went up from the earth, watering all the face of the land.

Darby English Bible (DBY)
But a mist went up from the earth, and moistened the whole surface of the ground.

Webster’s Bible (WBT)
But there went up a mist from the earth, and watered the whole face of the ground.

World English Bible (WEB)
but a mist went up from the earth, and watered the whole surface of the ground.

Young’s Literal Translation (YLT)
and a mist goeth up from the earth, and hath watered the whole face of the ground.

ஆதியாகமம் Genesis 2:6
அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
But there went up a mist from the earth, and watered the whole face of the ground.

But
there
went
up
וְאֵ֖דwĕʾēdveh-ADE
mist
a
יַֽעֲלֶ֣הyaʿăleya-uh-LEH
from
מִןminmeen
the
earth,
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
watered
and
וְהִשְׁקָ֖הwĕhišqâveh-heesh-KA

אֶֽתʾetet
the
whole
כָּלkālkahl
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
ground.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA