1 ஆரோனின் புதல்வர்தம் பிரிவுகளாவன:ஆரோனின் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர்.

2 நாதாபும், அபிகூவும் புதல்வரின்றி அவர்கள் தந்தைக்கு முன்னரே இறந்து போயினர். எலயாசரும், இத்தாமரும் குருக்களாகப் பணி செய்தனர்.

3 தாவீது எலயாசரின் குடும்பத்தைச் சார்ந்த சாதோக்கு, இத்தாமர் குடும்பத்தைச் சார்ந்த அகிமெலக்கு ஆகியோரின் துணைகொண்டு பதவிவாரியாகவும் பணிவாரியாகவும் அவர்களில் பிரிவுகளை ஏற்படுத்தினார்.

4 இத்தாமரின் குடும்பத்தை விட எலயாசரின் குடும்பம் மிகுதியான தலைவர்களைக் கொண்டிருந்தது. எனவே, எலயாசரின் புதல்வரில் பதினாறு பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும், இத்தாமரின் புதல்வரில் எட்டுப்பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

5 எலயாசர், இத்தாமர் ஆகிய இரு குடும்பங்களின் புதல்வரிலும் திருத்தலத் தலைவர்களும் இறைப்பணித் தலைவர்களும் இருந்தமையால், சீட்டுக் குலுக்கல் முறையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.

6 நெத்தனியேலின் மகனும் லேவியனும் எழுத்தனுமான செமாயா, அரசர் அலுவலர்கள், குருக்களாகிய சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் முன்னிலையில் பதிவுசெய்தான். எலயாசரின் குடும்பத்திற்கும், இத்தாமரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.⒫

7 சீட்டு விழுந்த முறை; முதல் சீட்டு யோயாரிபுக்கு; இரண்டாம் சீட்டு எதாயாவுக்கு;

8 மூன்றாவது ஆரிமுக்கு; நான்காவது செயோரிமுக்கு;

9 ஐந்தாவது மல்கியாவுக்கு; ஆறாவது மியாமினுக்கு;

10 ஏழாவது அக்கோட்சுக்கு; எட்டாவது அபியாவுக்கு;

11 ஒன்பதாவது ஏசுவாவுக்கு; பத்தாவது செக்கனியாவுக்கு;

12 பதினொன்றாவது எலியாசிபுக்கு; பன்னிரண்டாவது யாக்கிமுக்கு;

13 பதின்மூன்றாவது உப்பாவுக்கு; பதினான்காவது எசேபயாவுக்கு;

14 பதினைந்தாவது பில்காவுக்கு; பதினாறாவது இம்மேருக்கு;

15 பதினேழாவது ஏசீருக்கு; பதினெட்டாவது அப்பிசேசுக்கு;

16 பத்தொன்பதாவது பெத்தகியாவுக்கு; இருபதாவது எசக்கேலுக்கு;

17 இருபத்தொன்றாவது யாக்கினுக்கு; இருபத்திரண்டாவது காமுலுக்கு;

18 இருபத்து மூன்றாவது தெலாயாவுக்கு; இருபத்து நான்காவது மாசியாவுக்கு.⒫

19 இவர்களே தங்கள் மூதாதையாகிய ஆரோன் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தந்த விதிமுறைகளை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கேற்ற வரிசை முறைப்படி ஆண்டவரின் இல்லம் சென்று, அங்கு நிறைவேற்றுவதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள்.

20 எஞ்சிய லேவியின் மக்களுள், அம்ராமின் புதல்வருள் சூபாவேல்; சூபாவேலின் புதல்வருள் எகதியா;

21 இரகபியாவின் புதல்வர்களுள் இசியா தலைவராய் இருந்தார்.⒫

22 இசுராகியரில் செலமோத்தும், செலமோத்தின் புதல்வருள் யாகாத்தும்;

23 இவருடைய புதல்வருள் முதல் மகன் எரிய்யா, இரண்டாம் மகன் அமரியா, மூன்றாம் மகன் யாகசியேல், நான்காவது மகன் எகமயாம்.

24 உசியேலின் புதல்வர், மீக்கா; மீக்காவின் புதல்வர் சாமீர்;

25 மீக்காவின் சகோதரர் இசியா; இசியாவின் புதல்வருள் செக்கரியா;

26 மெராரியின் புதல்வர் மக்லி, மூசி; மற்றும் அவர் மகன் யகசியா;

27 மெராரியின் மகனான யகசியாவின் புதல்வர்கள்; சோகாம், சக்கூர், இப்ரி.

28 மக்லியின் புதல்வர்: புதல்வர்கள் இல்லாத எலயாசர்;

29 மற்றும் கீசு, கீசின் புதல்வர் எரகுமவேல்.

30 மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரிமோத்து. தங்கள் மூதாதையர் வீட்டு லேவியரின் புதல்வர் இவர்களே.⒫

31 இவர்களும், தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் புதல்வர் செய்ததுபோல, தாவீது அரசர், சாதோக்கு, அகிமலேக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர், லேவியர் குடும்பங்களின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அவர் இளைய சகோதரருள் ஒருவருமாகச் சீட்டுப் போட்டு, தங்கள் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.