தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது:
பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாயிருக்கிறது என்றார்கள்.
அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.
ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.
இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.
| month, In the | בַּחֹ֙דֶשׁ֙ | baḥōdeš | ba-HOH-DESH |
| eighth | הַשְּׁמִינִ֔י | haššĕmînî | ha-sheh-mee-NEE |
| year the second | בִּשְׁנַ֥ת | bišnat | beesh-NAHT |
| in | שְׁתַּ֖יִם | šĕttayim | sheh-TA-yeem |
| of Darius, | לְדָרְיָ֑וֶשׁ | lĕdoryāweš | leh-dore-YA-vesh |
| came | הָיָ֣ה | hāyâ | ha-YA |
| the word | דְבַר | dĕbar | deh-VAHR |
| Lord the of | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Zechariah, | זְכַרְיָה֙ | zĕkaryāh | zeh-hahr-YA |
| the son | בֶּן | ben | ben |
| of Berechiah, | בֶּ֣רֶכְיָ֔ה | berekyâ | BEH-rek-YA |
| son the | בֶּן | ben | ben |
| of Iddo | עִדּ֥וֹ | ʿiddô | EE-doh |
| the prophet, | הַנָּבִ֖יא | hannābîʾ | ha-na-VEE |
| saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |