உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.
இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.
நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்குப் பெண்கொடுக்கக் கூடாது; பென்யமீனருக்குப் பெண்கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள்.
சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.
அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவுசெய்யுங்கள்; நாங்கள் யுத்தம்பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிகொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.
| And the children | וַיִּתְהַלְּכ֨וּ | wayyithallĕkû | va-yeet-ha-leh-HOO |
| of Israel | מִשָּׁ֤ם | miššām | mee-SHAHM |
| departed | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| thence | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| at that | בָּעֵ֣ת | bāʿēt | ba-ATE |
| time, | הַהִ֔יא | hahîʾ | ha-HEE |
| every man | אִ֥ישׁ | ʾîš | eesh |
| to his tribe | לְשִׁבְט֖וֹ | lĕšibṭô | leh-sheev-TOH |
| and to his family, | וּלְמִשְׁפַּחְתּ֑וֹ | ûlĕmišpaḥtô | oo-leh-meesh-pahk-TOH |
| and they went out | וַיֵּֽצְא֣וּ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
| from thence | מִשָּׁ֔ם | miššām | mee-SHAHM |
| every man | אִ֖ישׁ | ʾîš | eesh |
| to his inheritance. | לְנַֽחֲלָתֽוֹ׃ | lĕnaḥălātô | leh-NA-huh-la-TOH |