அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.
அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்.
அப்பொழுது மனோவா: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.
அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.
மனோவா போய், வெள்ளாட்டுக் குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.
அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பு கையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.
பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,
அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.
பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
| For, | כִּי֩ | kiy | kee |
| lo, | הִנָּ֨ךְ | hinnāk | hee-NAHK |
| thou shalt conceive, | הָרָ֜ה | hārâ | ha-RA |
| and bear | וְיֹלַ֣דְתְּ | wĕyōladĕt | veh-yoh-LA-det |
| a son; | בֵּ֗ן | bēn | bane |
| and no | וּמוֹרָה֙ | ûmôrāh | oo-moh-RA |
| razor | לֹֽא | lōʾ | loh |
| shall come | יַעֲלֶ֣ה | yaʿăle | ya-uh-LEH |
| on | עַל | ʿal | al |
| his head: | רֹאשׁ֔וֹ | rōʾšô | roh-SHOH |
| for | כִּֽי | kî | kee |
| the child | נְזִ֧יר | nĕzîr | neh-ZEER |
| shall be | אֱלֹהִ֛ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| a Nazarite | יִֽהְיֶ֥ה | yihĕye | yee-heh-YEH |
| unto God | הַנַּ֖עַר | hannaʿar | ha-NA-ar |
| from | מִן | min | meen |
| the womb: | הַבָּ֑טֶן | habbāṭen | ha-BA-ten |
| and he | וְה֗וּא | wĕhûʾ | veh-HOO |
| shall begin | יָחֵ֛ל | yāḥēl | ya-HALE |
| to deliver | לְהוֹשִׁ֥יעַ | lĕhôšîaʿ | leh-hoh-SHEE-ah |
| אֶת | ʾet | et | |
| Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| out of the hand | מִיַּ֥ד | miyyad | mee-YAHD |
| of the Philistines. | פְּלִשְׁתִּֽים׃ | pĕlištîm | peh-leesh-TEEM |