பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான்.
கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் ஜனங்களாகிலும் செவிகொடுக்கவில்லை.
பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றிக்கைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.
அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்,
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும்.
உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும், மீந்தவர்கள் எல்லாரும் காயம்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்களென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.
அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்சேர்வையின் அதிபதியாகிய யெரியா என்னும் நாமமுள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் குமாரனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்று சொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான்.
அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின்சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.
அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.
பின்பு சிதேக்கியா ராஜா அவனை அழைத்தனுப்பி: கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.
பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டிலே அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த ஜனத்துக்கும் விரோதமாக என்ன குற்றஞ்செய்தேன்?
பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்துக்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே?
| And Zedekiah | וַיִּשְׁלַח֩ | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| the king | הַמֶּ֨לֶךְ | hammelek | ha-MEH-lek |
| sent | צִדְקִיָּ֜הוּ | ṣidqiyyāhû | tseed-kee-YA-hoo |
| אֶת | ʾet | et | |
| Jehucal | יְהוּכַ֣ל | yĕhûkal | yeh-hoo-HAHL |
| the son | בֶּן | ben | ben |
| of Shelemiah | שֶֽׁלֶמְיָ֗ה | šelemyâ | sheh-lem-YA |
| and Zephaniah | וְאֶת | wĕʾet | veh-ET |
| the son | צְפַנְיָ֤הוּ | ṣĕpanyāhû | tseh-fahn-YA-hoo |
| of Maaseiah | בֶן | ben | ven |
| the priest | מַֽעֲשֵׂיָה֙ | maʿăśēyāh | ma-uh-say-YA |
| to | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| the prophet | אֶל | ʾel | el |
| Jeremiah, | יִרְמְיָ֥הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo |
| saying, | הַנָּבִ֖יא | hannābîʾ | ha-na-VEE |
| Pray | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| now | הִתְפַּלֶּל | hitpallel | heet-pa-LEL |
| unto | נָ֣א | nāʾ | na |
| the Lord | בַעֲדֵ֔נוּ | baʿădēnû | va-uh-DAY-noo |
| our God | אֶל | ʾel | el |
| for us. | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| אֱלֹהֵֽינוּ׃ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |