சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்று போட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.
மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்.
அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.
மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள்.
தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.
அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.
அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.
அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகΰின்மேல͠தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
| Behold | הִנֵּה | hinnē | hee-NAY |
| now, | נָ֠א | nāʾ | na |
| thy servant | מָצָ֨א | māṣāʾ | ma-TSA |
| hath found | עַבְדְּךָ֣ | ʿabdĕkā | av-deh-HA |
| grace | חֵן֮ | ḥēn | hane |
| in thy sight, | בְּעֵינֶיךָ֒ | bĕʿênêkā | beh-ay-nay-HA |
| and thou hast magnified | וַתַּגְדֵּ֣ל | wattagdēl | va-tahɡ-DALE |
| thy mercy, | חַסְדְּךָ֗ | ḥasdĕkā | hahs-deh-HA |
| which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| thou hast shewed | עָשִׂ֙יתָ֙ | ʿāśîtā | ah-SEE-TA |
| unto me | עִמָּדִ֔י | ʿimmādî | ee-ma-DEE |
| in saving | לְהַֽחֲי֖וֹת | lĕhaḥăyôt | leh-ha-huh-YOTE |
| אֶת | ʾet | et | |
| my life; | נַפְשִׁ֑י | napšî | nahf-SHEE |
| and I | וְאָֽנֹכִ֗י | wĕʾānōkî | veh-ah-noh-HEE |
| cannot | לֹ֤א | lōʾ | loh |
| אוּכַל֙ | ʾûkal | oo-HAHL | |
| escape | לְהִמָּלֵ֣ט | lĕhimmālēṭ | leh-hee-ma-LATE |
| to the mountain, | הָהָ֔רָה | hāhārâ | ha-HA-ra |
| lest | פֶּן | pen | pen |
| some evil | תִּדְבָּקַ֥נִי | tidbāqanî | teed-ba-KA-nee |
| take | הָֽרָעָ֖ה | hārāʿâ | ha-ra-AH |
| me, and I die: | וָמַֽתִּי׃ | wāmattî | va-MA-tee |