நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,
கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.
மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள்.
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.
அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.
கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.
| In the same | וּפָקַדְתִּ֗י | ûpāqadtî | oo-fa-kahd-TEE |
| day | עַ֧ל | ʿal | al |
| also will I punish | כָּל | kāl | kahl |
| הַדּוֹלֵ֛ג | haddôlēg | ha-doh-LAɡE | |
| all | עַל | ʿal | al |
| those that leap | הַמִּפְתָּ֖ן | hammiptān | ha-meef-TAHN |
| on | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| the threshold, | הַה֑וּא | hahûʾ | ha-HOO |
| which fill | הַֽמְמַלְאִ֛ים | hammalʾîm | hahm-mahl-EEM |
| their masters' | בֵּ֥ית | bêt | bate |
| houses | אֲדֹנֵיהֶ֖ם | ʾădōnêhem | uh-doh-nay-HEM |
| with violence | חָמָ֥ס | ḥāmās | ha-MAHS |
| and deceit. | וּמִרְמָֽה׃ | ûmirmâ | oo-meer-MA |