எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்.
அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலுூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.
பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.
இது எகிப்தியருடைய பாவத்துக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.
அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.
| And ye shall flee | וְנַסְתֶּ֣ם | wĕnastem | veh-nahs-TEM |
| to the valley | גֵּֽיא | gêʾ | ɡay |
| of the mountains; | הָרַ֗י | hāray | ha-RAI |
| for | כִּֽי | kî | kee |
| the valley | יַגִּ֣יעַ | yaggîaʿ | ya-ɡEE-ah |
| of the mountains | גֵּי | gê | ɡay |
| shall reach | הָרִים֮ | hārîm | ha-REEM |
| unto | אֶל | ʾel | el |
| Azal: | אָצַל֒ | ʾāṣal | ah-TSAHL |
| yea, ye shall flee, | וְנַסְתֶּ֗ם | wĕnastem | veh-nahs-TEM |
| like as | כַּאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
| ye fled | נַסְתֶּם֙ | nastem | nahs-TEM |
| from before | מִפְּנֵ֣י | mippĕnê | mee-peh-NAY |
| the earthquake | הָרַ֔עַשׁ | hāraʿaš | ha-RA-ash |
| in the days | בִּימֵ֖י | bîmê | bee-MAY |
| of Uzziah | עֻזִּיָּ֣ה | ʿuzziyyâ | oo-zee-YA |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Judah: | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and the Lord | וּבָא֙ | ûbāʾ | oo-VA |
| my God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| shall come, | אֱלֹהַ֔י | ʾĕlōhay | ay-loh-HAI |
| and all | כָּל | kāl | kahl |
| the saints | קְדֹשִׁ֖ים | qĕdōšîm | keh-doh-SHEEM |
| with | עִמָּֽךְ׃ | ʿimmāk | ee-MAHK |