எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீர் எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலுூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.
பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.
இது எகிப்தியருடைய பாவத்துக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.
| Yea, every | וְ֠הָיָה | wĕhāyâ | VEH-ha-ya |
| pot | כָּל | kāl | kahl |
| in Jerusalem | סִ֨יר | sîr | seer |
| and in Judah | בִּירוּשָׁלִַ֜ם | bîrûšālaim | bee-roo-sha-la-EEM |
| shall be | וּבִֽיהוּדָ֗ה | ûbîhûdâ | oo-vee-hoo-DA |
| holiness | קֹ֚דֶשׁ | qōdeš | KOH-desh |
| unto the Lord | לַיהוָ֣ה | layhwâ | lai-VA |
| of hosts: | צְבָא֔וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| and all | וּבָ֙אוּ֙ | ûbāʾû | oo-VA-OO |
| they that sacrifice | כָּל | kāl | kahl |
| shall come | הַזֹּ֣בְחִ֔ים | hazzōbĕḥîm | ha-ZOH-veh-HEEM |
| and take | וְלָקְח֥וּ | wĕloqḥû | veh-loke-HOO |
| of them, and seethe | מֵהֶ֖ם | mēhem | may-HEM |
| therein: and in that | וּבִשְּׁל֣וּ | ûbiššĕlû | oo-vee-sheh-LOO |
| day | בָהֶ֑ם | bāhem | va-HEM |
| there shall be | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| no | יִהְיֶ֨ה | yihye | yee-YEH |
| more | כְנַעֲנִ֥י | kĕnaʿănî | heh-na-uh-NEE |
| the Canaanite | ע֛וֹד | ʿôd | ode |
| in the house | בְּבֵית | bĕbêt | beh-VATE |
| of the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| of hosts. | צְבָא֖וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| בַּיּ֥וֹם | bayyôm | BA-yome | |
| הַהֽוּא׃ | hahûʾ | ha-HOO |