ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.
அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார்.
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,
அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.
ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.
இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.
இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.
| Be | אַל | ʾal | al |
| ye not | תִּהְי֣וּ | tihyû | tee-YOO |
| as your fathers, | כַאֲבֹֽתֵיכֶ֡ם | kaʾăbōtêkem | ha-uh-voh-tay-HEM |
| unto | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| whom | קָרְאֽוּ | qorʾû | kore-OO |
| the former | אֲלֵיהֶם֩ | ʾălêhem | uh-lay-HEM |
| prophets | הַנְּבִיאִ֨ים | hannĕbîʾîm | ha-neh-vee-EEM |
| have cried, | הָרִֽאשֹׁנִ֜ים | hāriʾšōnîm | ha-ree-shoh-NEEM |
| saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| Thus | כֹּ֤ה | kō | koh |
| saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| of hosts; | צְבָא֔וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| Turn | שׁ֤וּבוּ | šûbû | SHOO-voo |
| ye now | נָא֙ | nāʾ | na |
| from your evil | מִדַּרְכֵיכֶ֣ם | middarkêkem | mee-dahr-hay-HEM |
| ways, | הָרָעִ֔ים | hārāʿîm | ha-ra-EEM |
| and from your evil | וּמַֽעַלְילֵיכֶ֖ם | ûmaʿalylêkem | oo-ma-al-y-lay-HEM |
| doings: | הָֽרָעִ֑ים | hārāʿîm | ha-ra-EEM |
| but they did not | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| hear, | שָׁמְע֛וּ | šomʿû | shome-OO |
| nor | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| hearken | הִקְשִׁ֥יבוּ | hiqšîbû | heek-SHEE-voo |
| unto | אֵלַ֖י | ʾēlay | ay-LAI |
| me, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |