1 கர்த்தர் அரசர். அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார். அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது, அது அசைக்கப்படுவதில்லை.

2 தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது. தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்!

3 கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது. மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன.

4 கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன. ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.

5 கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும். உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும்.

Psalm 93 ERV IRV TRV