1 ⁽தெய்வீக சபையில் கடவுள்␢ எழுந்தருளியிருக்கின்றார்;␢ தெய்வங்களிடையே அவர்␢ நீதித்தீர்ப்பு வழங்குகின்றார்.⁾

2 ⁽‛எவ்வளவு காலம் நீங்கள்␢ நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள்?␢ எவ்வளவு காலம் பொல்லாருக்குச்␢ சலுகை காட்டுவீர்கள்? (சேலா)⁾

3 ⁽எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும்␢ நீதி வழங்குங்கள்;␢ சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும்␢ நியாயம் வழங்குங்கள்!⁾

4 ⁽எளியோரையும் வறியோரையும்␢ விடுவியுங்கள்!␢ பொல்லாரின் பிடியினின்று␢ அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்!⁾

5 ⁽உங்களுக்கு அறிவுமில்லை;␢ உணர்வுமில்லை;␢ நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்;␢ பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே␢ அசைந்துவிட்டன.⁾

6 ⁽‛நீங்கள் தெய்வங்கள்;␢ நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்.⁾

7 ⁽ஆயினும், நீங்களும்␢ மனிதர்போன்று மடிவீர்கள்;␢ தலைவர்களுள் ஒருவர் போல␢ வீழ்வீர்கள்’ என்றேன்.⁾

8 ⁽கடவுளே, உலகில் எழுந்தருளும்,␢ அதில் நீதியை நிலைநாட்டும்;␢ ஏனெனில், எல்லா நாட்டினரும்␢ உமக்கே சொந்தம்.⁾

Psalm 82 ERV IRV TRV