1 தேவன் தேவர்களின் சபையில் நிற்கிறார். தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி.

2 தேவன், “எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்? தீயவர்களைத் தண்டனை இல்லாமல் எவ்வளவு காலம் தப்பிக்கச் செய்வீர்கள்?”

3 “ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள். அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.

4 ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள். அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள்.

5 “அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள். அவர்கள் புரிந்துகொள்ளார்கள்! அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியார்கள். அவர்கள் உலகம் அவர்களைச் சுற்றிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது!” என்கிறார்.

6 நான் (தேவன்), “நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய மகன்கள்.

7 ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள். பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்” என்று சொல்லுகிறேன்.

8 தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்! தேவனே, தேசங்களுக்கெல்லாம் நீரே தலைவராயிரும்!

Psalm 82 ERV IRV TRV