1 ⁽ஆண்டவரே, காத்தருளும்;␢ ஏனெனில் உலகில்␢ இறையன்பர்கள் அற்றுப் போயினர்;␢ மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.⁾

2 ⁽ஒருவர் அடுத்திருப்பாரிடம்␢ பொய் பேசுகின்றனர்;␢ தேனொழுகும் இதழால்␢ இருமனத்தோடு பேசுகின்றனர்.⁾

3 ⁽தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும்␢ ஆண்டவரே, துண்டித்துவிடுவீராக!␢ பெருமையடித்துக் கொள்ளும் நாவை␢ அறுத்துவிடுவீராக!⁾

4 ⁽‛எங்கள் நாவன்மை எங்கள் வலிமை;␢ எங்கள் பேச்சுத்திறனே␢ எங்கள் பக்கத் துணை;␢ எங்களுக்குத் தலைவர் வேறு யார்?’␢ என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!⁾

5 ⁽‛எளியோரின் புலம்பலையும்␢ வறியோரின் பெருமூச்சையும் கேட்டு␢ இப்பொழுதே எழுந்து வருகின்றேன்;␢ அவர்கள் ஏங்குகின்றபடி␢ *அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்*’␢ என்கின்றார் ஆண்டவர்.⁾

6 ⁽ஆண்டவரின் வாக்குறுதிகள்␢ கலப்பற்ற வாக்குறுதிகள்;␢ மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட␢ வெள்ளி போன்றவை;␢ ஏழுமுறை புடமிடப்பட்டவை.⁾

7 ⁽ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்;␢ இத்தகைய தலைமுறையிடமிருந்து␢ எம்மை என்றும் காப்பாற்றும்.⁾

8 ⁽பொல்லார் எம்மருங்கும்␢ உலாவருகின்றனர்; மானிடரிடையே␢ பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.⁾

Psalm 12 ERV IRV TRV